Oct 12, 2010

20 வருட இலக்கில் அபிவிருத்தி திட்;டங்கள் தயாரிப்பு





ஒத்துழைப்பு வழங்குமாறு தொழிலாளர் வர்க்கத்துக்கு ஜனாதிபதி அழைப்பு

நவம்பர் மாதத்தின் பின்னர் நாட்டின் துரித அபிவிருத்தியை நோக்கிய பயணத்தின் தீர்மானம் மிக்க சந்தர்ப்பத்தில் நாட்டிலுள்ள தொழிலாளர் வர்க்கத்தினர் உட்பட அனைத்து மக்களினதும் ஒத்துழைப்பு அவசியம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நவம்பர் மாதம் தனது இரண்டாவது பதிவிக் காலம் ஆரம்பமாவதுடன் இலங்கையை துரித அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்லும் இலக்கை நோக்கி செல்லவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று அலரி மாளிகையில் நடைபெற்ற தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடனான விசேட சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அபிவிருத்தியடைந்துள்ள நாட்டை கட்டியெழுப்பும் போது ஒழுக்கம் மிக அவசியமானது. ஒழுக்கமுள்ள பண்புள்ள பரம்பரையொன்றை உருவாக்குவதுடன் நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாட்டிலுள்ள தொழிலாளர் வர்க்கத்தின் ஒத்துழைப்பு மிகவும் இன்றியமையாதது.

ண்ட்டின் தற்போதைய நிலைமை தொடர்பாக தொழிலாளர் வர்க்கத்தினர் புரிந்துணர்வுடன் செயற்படுவதையிட்டு ஜனாதிபதி தனது பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார். யுத்தத்தின் பின்னர் நாட்டை பாரிய அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்வதற்கு இந்த அரசாங்கத்திற்கு முடிந்துள்ளது.

அடுத்த அபிவிருத்தியை நோக்கிய இலக்கை வேண்டுவதற்குரிய திட்டங்கள் வகுக்கப்படுகின்றதுடன் அடுத்த 20 வருட காலத்துக்குரிய தேவைகளைப் பூரணத்துவபடுத்துவதற்குரிய திட்டங்கள் முழுமையாக தயாரிக்கப்பட்டுள்ளன எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சக்திமிக்க அரச சேவையொன்றை கட்டியெழுப்புவதற்கு தொழிற்சங்கங்களின் பங்களிப்பு மிக அவசியமானது. அதன் பலனை இந்த நாட்டிலுள்ள அனைத்து மக்களும் பெறக்கூடியதாக இருக்குமென்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

தொழிற்சங்க பிரதிநிதிகள், தொழில் அமைச்சர் காமினி லொக்குகே, மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானா, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி வீ. பி. ஜயசுந்தர ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

இரண்டாம் உலகப்போர் வெடிகுண்டு செயலிழப்பு


இரண்டாம் உலகப்போர் காலத்தில் இருந்து வெடிக்காமல் இருந்த பயங்கரமான வெடிகுண்டை, மலேசிய போலீசார் கண்டுபிடித்து அழித்தனர்.

இரண்டாம் உலகப்போரின் போது, மலேசியாவின் சாரவாக் என்ற கிழக்கு மாநிலத்தில் லுட்டாங் என்ற இடத்தில் இருந்த அரசு நடுநிலைப் பள்ளி அருகில் குண்டு வீசப்பட்டது. ஒரு கட்டுமான ஊழியர், நிலத்தைத் துளையிட்ட போது அது அங்கு புதைந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டு, போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதுவரை அம்மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டுகளில் இதுதான் மிகப் பெரியது. மொத்தம் 450 கிலோ எடை கொண்ட இந்த வெடிகுண்டை, அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு சேதம் ஏதும் வராமல் அழிக்க ஏற்பாடு செய்தனர். அதன்பின், தரையில் 3.66 மீ., ஆழமுள்ள குழி தோண்டி அந்த வெடிகுண்டை புதைத்தனர். பின், நள்ளிரவில் ஆள்நடமாட்டம் குறைந்தபின் அந்த வெடிகுண்டை வெடிக்கச்செய்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

மலையில் விமானம் மோதி 7 பேர் பலி




ஆப்கானில் பயணிகள் விமானம் ஒன்று மலை மீது மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் இறந்தனர். ஆப்கன் தலைநகர் காபூல் நோக்கி நேற்று இரவு வந்து கொண்டிருந்த பயணிகள் விமானம், காபூல் அருகே உள்ள மலை மீது மோதியதில் விழுந்து நொறுங்கியது. இதில் 7 பேர் பலியானர். இறந்தவர்கள் அனைவரும் வெளிநாட்டவர்கள் என்றும், எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்ற விவரங்கள் தெரியவில்லை எனவும் உள்ளூர் விமான போக்குவரத்து அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் நடந்த இடத்திற்கு மீட்புப் படையினர் விரைந்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...