Oct 14, 2010

பொதுநலவாய விளையாட்டுப் போட்டிக்கு சென்ற ஜனாதிபதிக்கு மகத்தான வரவேற்பு

இந்திய பிரதமருடனும் முக்கிய அமைச்சர்களுடனும் பேச்சு
இந்தியாவில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று புதுடில்லி பயணமானார்.

நேற்று நண்பகல் புதுடில்லி பாம் இராணுவ விமானத் தளத்தைச் சென்றடைந்த ஜனாதிபதிக்கு இந்திய வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரிகள் மகத்தான வரவேற்பளித்துள்ளனர்.

இந்திய அரசாங்கத்தின் விசேட அழைப்பினை ஏற்று பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டி யில் கெளரவ அதிதியாகக் கலந்து கொள்ளும் ஜனாதிபதி இந்தியாவில் தங்கியுள்ள காலப் பகுதியில் இந் தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்குடன் இரு தரப்புப் பேச்சு வார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.

அத்துடன் மேற்படி விளையாட்டுப் போட்டியில் 72 வருடங்களின் பின்னர் குத்துச் சண்டைப் போட்டியில் முதலிடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்து தாய் நாட்டுக்குப் பெருமை சேர்த்த விளையாட்டு வீரர் மஞ்சு வன்னியாராச்சிக்கு ஜனாதிபதி நேரில் வாழ்த்துத் தெரிவிக்கவுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிசும் இணைந்து கொண்டுள்ளது டன் இரு நாடுகளினதும் வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட பல்வேறு துறை சம்பந்த மான முக்கியமான பேச்சுவார்த்தைகள் பல அங்கு இடம்பெறவுள்ளன.

இந்திய அரசாங்கத்தின் வெளிநாட்டலுவல் கள் அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, உள்நாட்ட லுவல்கள் அமைச்சர் பி. சிதம்பரம் மற்றும் மத்திய அமைச்சர் வயலார் ரவி உட்பட சிரேஷ்ட அமைச்சர்கள் பலருடனும் துறை சார்ந்த முன்னேற்றங்கள் குறித்த முக்கிய பேச்சு வார்த்தைகளை அமைச்சர் பீரிஸ் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

யாழ். கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ஹதுருசிங்கவுக்கு சர்வதேச சமாதான விருது


யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்கவுக்கு சர்வதேச சமாதான விருது வழங்கப்பட்டுள்ளது.

குஸி சர்வதேச சமாதான விருது என்ற அமைப்பு பிலிப்பைன்ஸின் மணிலா நகரில் வைத்து எதிர்வரும் 24ம் திகதி இந்த உயர் விருதை வழங்கவுள்ளது.

யாழ்ப்பாணத்திலுள்ள அப்பாவி தமிழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக முன்னெடுத்து வரும் செயற்பாடுகள் மற்றும் இலங்கையின் தேசிய ஒற்றுமைக்காக ஆற்றிவரும் பங்களிப்பாகவும் இந்த சர்வதேச சமாதான விருது வழங்கப்படவுள்ளதாக யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தலைமையக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உலகில் பல்வேறு துறைகளுக்காக சேவையாற்றிய 19 பேர் இந்த அமைப்பினால் வெவ்வேறு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்படவுள்ளதாக தெரிவித்த அவர், சமாதானத்திற்கான விருது உலகிலேயே இம்முறை மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்கவுக்கே வழங்கப்படவுள்ள என்றும் மேற்படி விருது ஆசியாவின் நோபல் பரிசுக்கு சமமானதாக கருதப்படுவதாகவும் தெரிவித்தார்.

யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளை தளபதியாக ஜனவரி மாதம் பொறுப்பேற்றுக்கொண்ட மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க பிலிப்பைன்ஸ் தேசிய பாதுகாப்பு கல்லூரியில் (2008-2009) தேசிய பாதுகாப்பு நிர்வாகத் துறைக்கான முதுமாணி கற்கையைக் கற்றதுடன் இந்த கற்கை நெறியை கற்ற உலக நாடுகளின் இராணுவ உயர் அதிகாரிகள் மத்தியில் தங்கப்பதக்கத்தை வென்றார்.

1980ம் ஆண்டு செப்டெம்பர் 16ம் திகதி இலங்கை இராணுவத்தில் கெடட் அதிகாரியாக இணைந்துக்கொண்ட இவர் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் பல்வேறு முக்கிய பயிற்சிகளை பெற்றுள்ளார்.

இலங்கை இராணுவத்தின் புமபூமி, வடமராட்சி நடவடிக்கை, இராணுவ நீண்டகால சேவை, தேசபுத்ர, ரிவிரச நடவடிக்கை, வடக்கு, கிழக்கு நடவடிக்கை, 60 வது சுதந்திர தினம், இராணுவத்தின் 50வது ஆண்டு மற்றும் ரணசூர ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கில் நவம்பர் இறுதி வரை வாக்காளர் பதிவு கிளிநொச்சியில் தற்காலிக அலுவலகம்


வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், வவுனியா, மற்றும் மன்னார் மாவட்டங்களில் நவம்பர் மாதம் இறுதிவரை வாக்காளர் பதிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படவுள்ளன. மீள்குடியமர்த்தப்படும் பணிகள் அதிகளவில் நடைபெறும் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங் ளுக்கென உதவி தேர்தல் ஆணையாளர் ஒருவர் தேர்தல் ஆணையாளரினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

வாக்காளர் பதிவுகளை மேலும் இலகுவாக்கும் நோக்குடன் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் கிளிநொச்சி கச்சேரியில் தற்காலிக தேர்தல் அலுவலகமொன்றும் அமைக்கப் பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் அலுவலகம் தெரிவிக்கிறது.

2001 ஆம் ஆண்டுக்கு வாக்காளர் பதிவு செய்யும் நடவடிக்கை வடமாகாணம் உட்பட அனைத்து மாவட்டங்களிலும் கடந்த ஜூன் 01 ஆம் திகதி ஆரம்பமானது.

யுத்தம் முடிவடைந்த பின்னர் வடமாகாணத்தில் அனைத்து பிரதேசங்களிலும் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை பதியும் பணிகள் இம்முறையே முதன் முதலாக நடைபெறுகிறது.

பதிவு செய்யும் நடவடிக்கைகள் பெருமளவில் முடிவு பெற்றுள்ள போதிலும் பெருந்தொகையான இடம்பெயர்ந்தவர்களையும், முகாம்களில் தங்கியிருப்பவர்களையும் கொண்டுள்ள வடமாகாணத்திற்காக விசேட திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

ஆன்மீக வளர்ச்சிக்கான செயற்திட்டத்தை அமுல்படுத்தும் விசேட வேலைத் திட்டம்

இலங்கை பூராகவும் மாவட்ட மட்டத்தில நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற மத ஸ்தாபனங்களை அபிவிருத்தி செய்து ஆன்மீக வளர்ச்சிக்கான செயற்திட்டத்தினை அமுல்படுத்துவதற்கான விசேட வேலைத் திட்டம் நேற்று (14) அம்பாறை மாவட்டத்தில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அம்பாறை மாவட்டத்தில் உள்ள விஹாரைகள், பள்ளிவாசல்கள் மற்றும் கோயில்களுக்கு பிரதமர் டீ. எம். ஜயரத்னவுடனான குழுவினர் நேரடியாகச் சென்று அவற்றின் அபிவிருத்தி மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கான செயற்திட்டத்தினையும் ஆரம்பித்து வைத்தனர்.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் அதன் பணிப்பாளர் அஷ்ஷேக் வை. எல். எம். நவவி தலைமையில் இடம்பெற்ற வைபவம் அம்பாறை ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக பிரதமர் டீ. எம். ஜயரத்ன கலந்து கொண்டார்.

அமைச்சர் பீ. தயாரத்ன, கிழக்கு மாகாண ஆளுநர் அட்மிரல் மொஹான் விஜயவிக்ரம, ஜனாதிபதியின் ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ. எச். எம். அஸ்வர், பிரதி அமைச்சர் எம். கே. டீ. எஸ். குணவர்த்தன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்விற்கு வருகை தந்த அதிதிகள் பாரம்பரிய இஸ்லாமிய கலாசார முறையில் அழைத்துவரப்பட்டமை விசேட அம்சமாகும்.

இந்நிகழ்வின் போது முஸ்லிம் சமய பண்பாட்டலுவல் திணைக்களத்தின் மூலம் வழங்கப்பட்ட தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான காசோலைகள் பிரதமரும், புத்தசாசன மற்றும் மத விவகார அமைச்சருமான டீ. எம். ஜயரத்னவினால் வழங்கப்பட்டன. அக்கரைப்பற்று நகர ஜும்ஆப் பள்ளிவாசல், சம்பாந்துறை மஸ்ஜிதுன் நூறாணியா பள்ளிவாசல் வாங்காமம ஜும்ஆப் பள்ளிவாசல் போன்றவற்றுக்கு இந்நிதியுதவிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் டீ. எம். ஜயரத்ன குறிப்பிடுகையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆட்சியில் தற்போது நிரந்தரமானதோர் சமாதானச் சூழல் நிலவுகின்றது.

இந்த சூழ்நிலையில் மதஸ்தாபனங்கள் கெளரவத்துடன் மதிக்கப்படுகின்றன. இம்மத ஸ்தாபனங்கள் தற்போது துரித கதியில் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள மதஸ்தாபனங்கள் மிக விரைவில் விருத்தி செய்யப்படவுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

வெவன்டன் தோட்ட மண்சரிவு அச்சுறுத்தல்: வெளியேறிய குடும்பங்களுக்கு பாதுகாப்பான இடங்களில் வீடு

கொத்மலை, வெவன்டன் தோட்டத்தில் மண்சரிவு அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்துள்ள குடும்பங்களுக்குப் பாதுகாப்பான இடங்களில் வீடுகளை அமைத்துக்கொடுப்பதற்கு தோட்ட நிர்வாகம் இணக்கம் தெரிவித்துள்ளது.

நுவரெலியா மாவட்ட செயலாளர் டி. பி. ஜி. குமாரசிறி பிரதேச செயலாளர் ஊடாக தோட்ட நிர்வாகத்தினருடன் நடாத்திய பேச்சுவார்த்தையிலேயே இந்த இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது.

வெவன்டன் தோட்டத்திற்குச் செல்லும் பாதையிலும் அதனை அண்மித்த பிரதேசத்திலும் சுமார் நூறு மீட்டர் தூரத்திற்கு நிலத்தில் திடீரென நேற்று முன்தினம் வெடிப்பு ஏற்பட்டது. இவ்வெடிப்பின் காரணமாக வீதியின் ஒரு பகுதியும் கீழிறங்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் நுவரெலிய மாவட்ட இணைப்பாளர் கூறினார்.

இந்த வெடிப்பினால் தோன்றியுள்ள மண் சரிவு அச்சுறுத்தல் காரணமாக அங்கு வாழ்ந்த 29 குடும்பங்களைச் சேர்ந்த 128 பேர் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு, பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் டி. பி. ஜி. குமாரசிறி குறிப்பிட்டார்.

வெவன்டன் மகா வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டிருக்கும் இக் குடும்பங்களுக்கு சமைத்த உணவு நிவாரணம் வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை ஜனாதிபதி வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் : வைகோ கைது

பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் நிறைவு விழாவில் இலங்கை ஜனாதிபதி பங்கேற்பதற்குக் கண்டனம் தெரிவித்து கோவை காந்திபுரத்தில் ம.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டம் கோவை மாநகர மாவட்டச் செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கோவை ஆரிய வைத்திய நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திடீரென இதில் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய வைகோ,

"எனது உடல்நிலையைக் காரணம் காட்டி மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என வலியுறுத்தினார்கள். அதையும் மீறி இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வந்துள்ளேன். இலங்கை ஜனாதிபதிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் எனது குரலை பதிவு செய்ய ஓடி வந்தேன்.

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டபோது, இந்திய அரசு கண்டனம் தெரிவித்தது. பாகிஸ்தானில் இந்தியர்கள் தாக்கப்பட்டபோது பிரணாப் முகர்ஜி கொந்தளித்தார். ஆந்திரா, கேரள மக்கள் தாக்கப்பட்டால், இந்திய அரசு பெரும் குரல் கொடுத்து பேசுகிறது.

ஆனால் இலங்கையில் தமிழன் தாக்கப்பட்டபோது, பிரதமர் உட்பட அனைவரும் வாய்மூடித்தான் இருந்தார்கள். ஆயுத பலம், படை பலம் போன்றவற்றைக் கொடுத்து போர் செய்ய சொன்ன சோனியா காந்தி, இலங்கை ஜனாதிபதியை வரவழைத்து பரிவட்டம் கட்டி அழகு பார்த்தார்.

71 நாடுகள் கலந்து கொள்ளும் பொதுநலவாய போட்டிக்கு வரவழைத்து, இப்போது உபசரிக்கப் பார்க்கிறார். இதையெல்லாம் முதல்வர் கருணாநிதியின் அரசு பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. தடை செய்யப்பட்ட குண்டுகளை வீசி போர் செய்த இலங்கை ஜனாதிபதிக்கு, மேலும் அழகுபடுத்தி பார்க்கிறார்கள்.

தயவு செய்து ஒன்றே ஒன்றை மட்டும் குறித்துக் கொள்ளுங்கள். இதே நிலைமை நீடித்தால் தமிழகம் காஷ்மீராக மாறுவதை யாரும் தடுக்க முடியாது" என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய வைகோவை, பொலிசார் கைது செய்து கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள பாலகிருஷ்ணா திருமண மண்டபத்தில் தடுத்து வைத்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

அக்குறணை பிரதேச சபைப் பிரிவில் மாத இறுதிக்குள்

அக்குறணை பிரதேச சபைப் பிரிவில் மாத இறுதிக்குள் வரிகளை செலுத்தா விட்டால் உடமைகள் பறிமுதல்: சிம்ஸான்
அக்குறணைப் பிரதேச சபைப் பிரிவில் ஆதன வரிகளை இம்மாதம் முடிவதற்குள் செலுத்தா விட்டால் அவர்களது உடைமைகள் பறிமுதல் செய்யப் படும் என்று அக்குறணை பிரதேச சபையின் தலைவர் ஏ.எம்.எம்.சிம்ஸான் எமது இணையத்திற்குத் தெரிவித்தார். வரி சேகரிப்பைத் துரிதப் படுத்த 10 நடமாடும் சேவைகளை இம் மாத்தில் நடத்த வுள்ளதாகவும் அவர் கூறினார்.

தனது வருமானத்தை அதிகரிப்பதற்காக வருமானம் ஊக்குவிப்பு மாதமாக ஒக்டோபர் மாதத்தை அக்குறணை பிரதேச சபை அறிவித்துள்ளது.

இம்மாதம் முழுவதும் பிரதேச சபைக்கு வரி மூலம் சேர வேண்டிய வருமானத்தை சேகரிப்பதற்கு விஷேட திட்டங்கள் அமுல்படுத்தியுள்ளதாக அக்குறணை பிரதேச சபையின் தலைவர் ஏ.எம்.எம்.சிம்ஸான் தெரிவித்தார்.

இதற்கென அக்குறணை பிரதேச சபைப் பிரிவிலுள்ள 35 கிராம அதிகாரி பிரிவுகளை உள்ளடக்கிய 10 நடமாடும் சேவைகள் மூலம் வருமான வரியை சேகரிக்க வுள்ளது.

பிரதேச சபைக்கு முறையாகச் செலுத்தவேண்டிய ஆதன மற்றும் ஏனைய வரிகளை செலுத்தாவிட்டால் 1987ன் இல: 15 வது சட்டத்தின் கீழ் அவர்களுடைய உடைமைகளை சுவீகரிப்பதற்கு அதிகாரம் உள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை- இந்தியா இடையில் பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்க நடவடிக்கை

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவையொன்று ஆரம்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் தலை மன்னாருக்கும் இந்தியாவின் இராமேஸ்வரத்திற்கும் இடையில் இந்த கப்பல் போக்குவரத்து சேவை நடத்தப்பட உள்ளதாகக் தெரிவிக்கப்படுகின்றது.

கப்பல் சேவையை ஆரம்பிப்பது குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கை விரைவில் கைச்சாத்திடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கப்பல் சேவையை விரைவில் ஆரம்பிப்பது குறித்து இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை துறைமுக அதிகாரசபையின் வர்த்தகக் கப்பல் பிரிவு பொறுப்பாளர் சாந்த வீரக்கோன் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் காரணமாக பயணிகள் கப்பல் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

காத்தான்குடியில் முதலைகள் கிடக்கும் பகுதியில் விளம்பர பலகைகள் இட தீர்மானம்: முஸம்மில்

காத்தான்குடி வாவியில் முதலைகள் கிடக்கும் பகுதியினை அடையாளப்படுத்தி மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் அப்பகுதிக்கு செல்லாதவாறு விளம்பர பலகைள் இடுவதற்கு தீர்மானித்துள்ளதாக காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தெரிவித்தார்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் இன்று நடைபெற்ற அனர்த்த முகாமைத்துவக் குழுக் கூட்டத்தின் போதே இத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக பிரதேச செயலாளர் முஸம்பில் தெரிவித்தார்.

இவ் வாவியின் ஒரங்களில் மின்குமிள்கள்களை இடுவதென்றும் முதளைகளினால் மீனவர்களுக்கும் அதை அண்டி வாழும் மக்களுக்கும் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பாக வன பரிபாலன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு இதற்கான நடவடிக்கையினை எடுப்பதெனவும் இக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது.

இக் கூட்டத்தில் காத்தான்குடி நகர சபையின் தலைவர் மர்சூக் அகமதுலெவ்வை, மற்றும் காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜாபீர், அனர்த்த முகாமைத்துவ மட்டக்களப்பு மாவட்ட பதில் இணைப்பாளர் கசீர், காத்தான்குடி பள்ளிவாயல்கள் சம்மேளனத் தலைவர் இஸ்மாயில் உட்பட கிராம உத்தியோகத்தர்கள் பொலிஸார் விஷேட அதிரடிப்படையினர் இதில் கலந்து கொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

மட்டக்களப்பில் முஸ்லிம் மாணவி தற்கொலை

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரிதிதென்ன கிராமத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவியொருவர் இன்று காலை தற்கொலை செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

14 வயதுயை இம்மாணவி குடும்ப பிரச்சினை காரணமாகவே தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டுள்ளனர். ரிதிதென்ன இக்ரஹ் வித்தியாலய 9ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியான ஐயுப்கான் அஸ்சிறாபேகம் என்ற மாணவியே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

புதுடில்லியில் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு

பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இந்தியா சென்றடைந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு புது டில்லி விமான நிலையத்தில் மாபெரும் வரவேற்பளிக்கப்பட்டது.

இந்திய உயர் அதிகாரிகள் ஜனாதிபதியையும் அவரது குழுவினரையும் வரவேற்றனர்.

இந்திய மத்திய அரசின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி புது டில்லி சென்றுள்ளார். இன்று மாலை அங்கு நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டி இறுதி நாள் நிகழ்வில் விஷேட அதிதியாக ஜனாதிபதி கலந்துகொள்கிறார்.
மேலும் இங்கே தொடர்க...

நிவித்திகல குக்குலகல தோட்டத்தில் மக்கள் தொடர்ந்து வாழ முடியாது: சிவாஜிலிங்கம்

நிவித்திகல குக்குலகல தோட்டத்தில் மக்கள் தொடர்ந்து வாழ முடியாத நிலை காணப்படுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்ம் தெரிவித்தார்.

இன்று நிவித்திகல குக்குலகல பிரதேசத்துக்கு விஜயம் செய்த சிவாஜிலிங்கம் அங்குள்ள தமிழ் மக்களை சந்தித்துள்ளார்.

இது குறித்து எமது இணையத்தளத்துக்கு கருத்து தெரிவித்த எம்.கே சிவாஜிலிங்கம்,

"நான் இன்று நிவித்திகல குக்குலகல பிரதேச மக்களை நேரில் சென்று சந்திதேன். இவர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.

இம் மக்கள் இங்கு தொடர்ந்து தங்க முடியாத நிலை காணப்படுகின்றது. இதுவரை 10 குடும்பங்கள் மாத்திரமே மீள்குடியேறியுள்ளதாகவும் தற்போதும் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை காணப்படுவதாகவும் தெரிவித்தனர்.

தமிழ் குடும்பங்களின் 25 வீடுகள் பெருபான்மை இனத்தவரால் தாக்கப்பட்டுள்ளதோடு உடைமைகளுக்கும் சேதம் விளைவித்துள்ளனர்.

எனினும் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார மட்டுமே வந்து தம்மை பார்வையிட்டதாகவும், எந்த ஒரு தமிழ் அமைச்சரும் வரவில்லை என மக்கள் கவலை தெரிவித்தனர்" என மேலும் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

வியட்நாம் ராணுவத்துக்கு உதவி: இந்தியா முடிவு

:

வியட்நாமில் உள்ள ஹனோயில் புதன்கிழமை அந்நாட்டு ராணுவம் அளித்த அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி.
ஹனோய், அக்.13: வியட்நாம் நாட்டின் ராணுவத்தை வலுப்படுத்துவதற்கு உதவி செய்ய இந்தியா முடிவெடுத்துள்ளது.

வியட்நாம் தலைநகர் ஹனோயில் செவ்வாய்க்கிழமை ஆசியான் நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்தியா சார்பில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி பங்கேற்றார்.

இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் வியட்நாம் பிரதமர் என்குயேன் தன் துங், பாதுகாப்பு அமைச்சர் புங் குவாங் தாங் ஆகியோரை சந்தித்துப் பேசினார் ஏ.கே. அந்தோனி.

இந்த சந்திப்பின் போது இரு நாடுகளும் ராணுவத் துறையில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவதென முடிவெடுக்கப்பட்டது.

வியட்நாம் பாதுகாப்புப் படைகளை வலுப்படுத்த தேவையான அனைத்து உதவிகளை செய்ய இந்தியா தயாராக இருப்பதாக ஏ.கே. அந்தோனி தெரிவித்தார்.

வனம் மற்றும் மலைப் பகுதியில் போர்ப் பயிற்சியை இணைந்து மேற்கொள்ளுதல், ராணுவம் தொடர்பான அனுபவம் மற்றும் அறிவை பகிர்ந்து கொள்ளுதல், ராணுவ மையங்களுக்கு இடையே நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதென இரு நாட்டுத் தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

இந்தியாவுடன் ராணுவ ஒத்துழைப்பு ஏற்படுத்திக்கொள்ள வியட்நாம் ஆவலாக உள்ளது. இதை இந்தியாவும் வரவேற்றுள்ளது.

குறிப்பாக அந்நாட்டின் கடற்படையை வலுப்படுத்த உதவ தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது என்று இந்திய பாதுகாப்புத் துறை அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.

ராணுவத் துறை தவிர்த்து, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பிற துறைகளிலும் இரு நாடுகளும் ஒத்துழைப்பை ஏற்படுத்திக்கொள்வதென முடிவெடுத்துள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

பாகிஸ்தான் கடலில் மீன் பிடித்த 5 இந்திய மீனவர்கள் கைது



பாகிஸ்தான் கடலுக்குள் சென்று மீன் பிடித்த இந்திய மீனவர்கள் 5 பேரை பாகிஸ்தான் கடற்படை செவ்வாய்க்கிழமை கைது செய்தது. அவர்களிடம் இருந்து 2 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்தியாவைச் சேர்ந்த 5 மீனவர்கள், 2 படகுகளில் இந்திய கடல் எல்லையத் தாண்டி 45 நாட்டிகல் மைல் பாகிஸ்தான் கடலுக்குள் நுழைந்து மீன்பிடித்தனர். இதையடுத்து அவர்கள் 5 பேரும் கைது செய்யப்பட்டனர் என பாகிஸ்தான் கடற்படை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் கடல் பகுதியில் மீன் வளம் அதிகமாக உள்ளது. இந்த பகுதிகளில் உள்ள விலையுயர்ந்த மீன்களை பிடிப்பதற்காக இந்திய மீனவர்கள் தொடர்ந்து பாகிஸ்தான் கடலுக்குள் நுழைந்து வருகின்றனர்.

பாகிஸ்தான் கடல் எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்த பாகிஸ்தான் அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக கடற்படையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

சிலி சுரங்கத்தினுள் சிக்கியோர் வெற்றிகரமாக மீட்பு






சிலியில் 68 நாட்களாக சுரங்கத்துக்குள் சிக்கி ஜீவ மரணப் போராட்டம் நடத்திய 33 சுரங்கத் தொழிலாளர்களையும் மீட்கும் பணி நேற்று ஆரம்பமாகியது. இலங்கை நேரப்படி நேற்றுக் காலை 6.30 அளவில் பிளாரென்கியோ அவலோன் என்ற நபர் முதலில் பத்திரமாக மீட்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து இதுவரை 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

மீட்புத் பணிகள் நடக்கும் இடத்தில் சிலிநாட்டு ஜனாதிபதி செவான்டியன் பிரினெராவும் இருந்தார். முதலில் மீட்கப்பட்ட அவலோனை ஜனாதிபதி கைகொடுத்து வரவேற்றார்.

அவலோனை அவரது மனைவியும் குழந்தையும் கண்ணீர் மல்க வரவேற்று கட்டித் தழுவிய காட்சி அங்கிருந்த அனைவரையும்

நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது. சுரங்கத்துக்குள் சிக்கியிருக்கும் ஒவ்வொரு தொழிலாளியையும் மீட்க 90 நிமிடங்கள் தேவைப்படும் என மீட்புக் குழுவினர் கூறுகின்றனர்.

மீட்கப்படும் அனைத்து தொழிலாளர்க ளுக்கும மருத்துவ உதவி வழங்கப்படுகிறது. 68 நாட்கள் சுரங்கத்துக்குள் இருளில் சிக்கியிருந்ததால் அவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகியிருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால் தான் அவர்களுக்கு மருத்துவ கவுன்சிலிங் வழங்கப்படுவதாக மருத்துவர்கள் குழு கூறுகிறது.

சுரங்கத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில் சிலி ஜனாதிபதி செபஸ்டியன் பிரினெரா மீட்பு நடவடிக்கை பற்றி குறிப்பிடும்போது,

துன்பம் வரும் வேளையில் எமது உண்மையான ஆத்மா எத்தகையவற்றை செய்ய முடியும் என்பதை இந்த நாடு காட்டியுள்ளது. ஆனால் 33 பேரும் மேலே வரும்வரை அது முடிந்ததாக கூறமுடியாது என்று கூறியுள்ளார். சிலியை கடந்த பெப்ரவரியில் தாக்கிய பூகம்பத்தினால் ஏற்பட்ட பாதிப்பையும் அவர் இச்சமயம் நினைவுபடுத்தினார்.

சுரங்கத் தொழிலாளர்கள் சிலியின் ஐக்கியத்தையும் அது செய்யக்கூடியதையும் பிரதிபலிப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

உலகிலேயே அதிக ஆழத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு மீட்பு நடவடிக்கை இது என நம்பப்படுகிறது. அத்துடன் சுரங்கத்துக்குள் சிக்கியிருந்தவர்கள் பூமிக்குள் சுரங்கமொன்றுக்குள் அதிக காலம் சிக்கியிருந்து உயிருடன் மீட்கப்பட்டவர்களாவர்.

இதேவேளை சுரங்கத்தில் விபத்து ஏற்பட்ட விதம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று சுரங்கக் கைத்தொழிலுக்கு பொறுப்பான சிரேஷ்ட அதிகாரியொருவர் கூறுகிறார்.

சிலி நாட்டிலுள்ள அடகாமா பாலைவனத்தில் உள்ள 700 மீட்டர் நீளம் கொண்ட சுரங்கத்தின் முக்கியபாதை திடீரென மண் சரிவால் மூடப்பட்டுவிட்டது. அப்போது சுரங்கத்தின் உட்பகுதியில் வேலை செய்துகொண்டிருந்த 33 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.

உள்ளே சிக்கிக்கொண்டவர்கள் உயிருடன் இருக்கிறார்களா? இல்லையா? என்ற அச்சம் நிலவியது. இந்நிலையில், உள்ளே இருந்தவர்கள் எஸ். எம். எஸ். மூலம் நாங்கள் உயிருடன் இருப்பதாக வெளியே இருந்தவர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து நாசாவின் உதவியுடன் சிலி அரசாங்கம் மீட்பு நடவடிக்கைகளை ஆரம்பித்தது.

மண்சரிவால் மூடப்பட்ட பகுதியில் துளை ஏற்படுத்தப்பட்டு அதன் வழியாக ஒரு சிறிய கமரா மூலம் சுரங்கத்தின் உட்பகுதி கண்காணிக்கப்பட்டது. அப்போது உள்ளே இருந்தவர்கள் கைகளை அசைத்தனர். இதனைத் தொடர்ந்தே மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.

முதலில் மீட்கப்பட்டவர்கள் நல்ல மனநிலையுடன் இருந்த அனுபவ மிக்க சுரங்கத் தொழிலாளர்களாவர். மீட்பு நடவடிக்கையின்போது பாதகமான சூழ்நிலை ஏற்பட்டால் அதனை தாங்கிக்கொள்ளும் மன உறுதி தேவை தேவைப்படுவதால் இவ்வாறு தீர்மானிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

அடுத்ததாக உடல் நிலை குன்றியவர்கள் மற்றும் சுகவீனமுற்றவர்கள் மேலே அழைத்து வரப்படுகின்றனர்.

உள்ளே சிக்கியுள்ள சுரங்கத் தொழிலாளர்களில் ஒருவர் அதிக இறத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர், ஒருவர் நீரிழிவு நோயாளர். சுரங்கத்துக்குள் நிலவும் ஈரத்தன்மை காரணமாக சிலர் சுவாச தொற்றுக்கும் தோல் நோய்களுக்கும் ஆளாகியுள்ளதாக தெரியவருகிறது.

உள்ளே சிக்கியிருக்கும் ஜிமி சன்சன் என்ற சுரங்கத் தொழிலாலியே வயதில் குறைந்தவர். 19 வயதான இவர் நான்கு மாத குழந்தையொன்றின் தந்தையாவார். கடந்த 5 மாதங்களாகத்தான் இவர் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

கிளொடியோ யெனஸ் என்ற சுரங்கத் தொழிலாளி 8 ஆவதாக மீட்கப்பட்டவர். கிறிஸ்டினா நுனெஸ் என்ற பெண் இவரை 11 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். யெனஸ் உயிருடன் மீட்கப் பட்ட மறுகனமே நுனெஸ் அவர்களது திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளார். கூடிய விரைவில் திருமணம் செய்ய இவர்கள் தீர்மானித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

ஐ.நா., பாதுகாப்பு சபையில் இந்தியா அதிகபட்ச ஆதரவுடன் அங்கீகாரம்



ஐ.நா., பாதுகாப்பு சபையில் தற்காலிக உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஆக்கபூர்வமாக செயல்படும் என, அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ஐ.நா., பாதுகாப்பு சபையில் மொத்தமுள்ள 15 இடங்களில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன் மட்டுமே நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன. மற்ற 10 நாடுகள் இரண்டு ஆண்டு கால சுழற்சி முறையில் இந்த சபையில் அங்கம் வகித்து வருகின்றன. இந்த சபையில் நிரந்தர அந்தஸ்து கேட்டு பிரேசில், ஜப்பான், இந்தியா உள்ளிட்ட நாடுகள் வற்புறுத்தி வருகின்றன.

இந்நிலையில், கடந்த 19 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சபையில் இந்தியா மீண்டும் தற்காலிக உறுப்பு நாடாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆசிய நாடுகளின் சார்பில் கஜகஸ்தானும், இந்தியாவும் இந்த முறை போட்டியிட்டன. ஆனால், இந்த ஆண்டு துவக்கத்தில் கஜகஸ்தான் இந்த போட்டியிலிருந்து விலகிக்கொண்டதால் இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது. 191 உறுப்பு நாடுகளில், 187 நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக ஓட்டளித்தன. கடந்த ஐந்தாண்டுகளில் நடந்த இம்மாதிரியான ஓட்டெடுப்பில் இவ்வளவு அதிகமான நாடுகள் ஒரே மாதிரி ஆதரவு தெரிவித்தது இல்லை. ஆப்ரிக்க நாடுகளின் சார்பில் தென் ஆப்ரிக்காவும், தென் அமெரிக்க நாடுகளின் சார்பில் கொலம்பியாவும், ஐரோப்பிய நாடுகளின் சார்பில் ஜெர்மனியும், போர்ச்சுகலும் தேர்வாகியுள்ளன. அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து இரண்டு ஆண்டு காலத்துக்கு இந்த நாடுகள் பாதுகாப்பு சபையில் உறுப்பு நாடாக இருக்கும். கடந்த 92ம் ஆண்டு முன்பு இந்தியா ஆறு முறை ஐ.நா., பாதுகாப்பு சபையில் உறுப்பு நாடாக இருந்துள்ளது.

ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இடம் பெற்றுள்ள இந்தியா, தன்னுடைய பொறுப்பை உணர்ந்து செயல்படும் என, வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி பி.ஜெ.க்ரோலே குறிப்பிடுகையில், "பாதுகாப்பு கவுன்சிலில் புதிய உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்தியா, ஜெர்மனி,போர்ச்சுகல், தென் ஆப்ரிக்கா, கொலம்பியா ஆகிய நாடுகள் ஆக்கபூர்வமாக செயல்படும் என நம்புகிறேன். சர்வதேச பிரச்னைகளை தனியொரு நாடு தீர்க்க முடியாது. எனவே, சர்வதேச பாதுகாப்பு மற்றும் அமைதிக்கு இந்த நாடுகள் உறுதுணையாக இருக்கும். ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த ஒபாமா அரசு விரும்புகிறது. இந்தியாவை போல ஒவ்வொரு நாடும் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடாக முயற்சிக்கின்றன. ஐ.நா.,வின் விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த விஷயத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

கொலைக்குற்றச்சாட்டு: கல்முனையில் இரு இளைஞர்களுக்கு மரண தண்டனை


கல்முனையில் கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக இரு இளைஞர்களுக்கு கல்முனை மேல் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்துள்ளது.

கல்முனைக்குடியில் கடந்த 2007,07,06ம் திகதி கல்முனைக்குடியைச் சேர்ந்த முகம்மட் யூசுப் முகம்மட் பரீட் என்ற இளைஞர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக மூன்று பேருக்கு எதிராக கல்முனை மஜிஸ்திரேட் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை இடம்பெற்று வந்தது.

இவ்வழக்கு தீர்ப்புக்காக கல்முனை மேல் நீதிமன்றிற்கு மாற்றப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வந்த வேளையில் நேற்று (13) புதன்கிழமை கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி விஸ்வலிங்கம் சந்திரமணி முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றின் மின் விளக்குகள், மின் விசிறிகள் அணைக்கப்பட்டு எல்லோரும் எழுந்து நின்று 2ம், 3ம் எதிரிகளுக்கு தூக்குத் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.

இதன் முதலாவது எதிரி மன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கல்முனைக்குடியைச் சேர்ந்த முகம்மது அம்ஜத் (வயது 27) சாய்ந்தமருதைச் சேர்ந்த பஸ்மிர் (வயது 25) ஆகிய இருவருக்குமே தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

பொலிஸ் மாஅதிபருக்கு நேரடி முறைப்பாடு செய்ய மின்னஞ்சல்


பொலிஸ் மா அதிபருக்கு நேரடியாக முறைப்பாடு மற்றும் தகவல்களை வழங் கும் இணையத்தள சேவை ஒன்றை பொலிஸ் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.

‘பொலிஸ் மா அதிபருக்குச் சொல்லுங்கள்’ என்ற இந்த இணையத்தள சேவையை பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய நேற்று ஆரம்பித்து வைத்தார்.

சமய வழிபாடுகளுடன் இந்த இணையத்தள சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சூசூசூ.ஙீச்ங்டுஷடீ.ங்கூ என்ற இணைய தளத்திலுள்ள சிலீங்டுகிஙீஃஙீச்ங்டுணீலீ.ங்கூ என்ற மின்னஞ்சலை தெரிவு செய்து இணையத் தளத்தின் ஊடாக முறைப்பாடுகள், கருத்துக்கள், ஆலோசனைகள் மற்றும் குற்றச்சாட்டுக்களை பொலிஸ் மா அதிபருக்கு நேரடியாக தெரிவிக்கலாம்.

பொதுமக்கள் தமது பிரதேசங்களில் உள்ள பிரச்சினைகள், பொலிஸ் நிலையங்களில் நடைபெறும் விசாரணைகளில் ஏற்படும் தாமதங்கள் என்பவற்றையும் இந்த இணையத்தளம் மூலம் தெரிவிக்க முடியும் என்று பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

இந்த முறைப்பாடுகளுக்கு இரு வாரங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

பேராதனை பல்கலை பொறியியல் பீடம் காலவரையறையின்றி மூடப்பட்டது


பேராதனை பல்கலைக்கழக பொறி யியல் பீடம் நேற்று புதன்கிழமை முதல் காலவரையறையின்றி மூடப் பட்டது.

மாணவர்களின் தொடர் போராட் டத்தை யடுத்தே பொறியியல் பீடம் மூடப்பட்டதாக பல்கலைக்கழக பேரா சிரியர் சரத் அபயகோன் அறிவித்து ள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

யாழ். சிங்கள மக்கள் மீள் குடியேற்றம் தொடர்பான கருத்துப் பகிர்வு


யாழ். திரும்பியுள்ள சிங்கள மக்களின் மீள் குடியேற்றம் என்ற கருப்பொருளிலான பகிரங்க கருத்துப் பகிர்வு நிகழ்வொன்று எதிர்வரும் சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்த கருத்துப் பகிர்வு நிகழ்வை யாழ். ஆய்வறிவாளர் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. தேசிய ஒருமைப்பாட்டில் நம்பிக்கை கொண்டவர்கள் அனைவரும் இச்செயலமர்வில் கருத்துரை வழங்க அனுமதிக்கப்படுவரென ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...