Mar 17, 2011

ஜப்பானைத் தொடர்ந்து கனடாவிலும் நிலநடுக்கம்

கனடாவின் ஒட்டாவா மற்றும் மொன்றியல் நகரங்களில் அந்நாட்டு நேரப்படி 1.36 மணியளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக 10 செக்கன்கள் வரை இந்நடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிச்டர் அளவுகளில் 4.3 ஆக அளவிடப்பட்டுள்ளது.

சேத விபரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

இதேவேளை, சிலியிலும் இதே போன்ற நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன
மேலும் இங்கே தொடர்க...

Feb 11, 2011

ரயிலில் மோதி இளைஞன் பலி



உடரட ரயிலில் மோதி இளைஞன் ஒருவன் உயிரிழந்த சம்பவமொன்று நேற்று அட்டன் பொலிஸ் பிரதேசத்திற்குட்பட்ட அட்டன் ரயில் நிலையத்திற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் அட்டன் சித்திர தோட்டத்தைச்சேர்ந்த அங்கப்பன் ஆண்டிராஜ் என்பவரே உயிரிழந்தவராவார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டதாக தெரிவிக்கும் அட்டன் பொலிஸார், உயிரிழந்த இளைஞன் சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் மதுபோதையில் இருந்ததாகவும் தெரிவித்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

நேரகாலத்துடன் விமான நிலையத்துக்கு வருமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தல்



கட்டுநாயக்க, பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தினூடாக எதிர்வரும் 12ஆம், 13ஆம் திகதிகளில் வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகள், தாம் பயணம் செய்யவுள்ள விமானம் புறப்படுவதற்கு 4 மணித்தியாலங்களுக்கு முன்னராகவே விமான நிலையத்திற்கு வர வேண்டும் என்று ஸ்ரீலங்கன் விமான நிலையத்திற்கு செல்லும் இலங்கை கனடா நட்புறவு வீதி மூடப்படுவதன் காரணமாகவே நேரகாலத்துடன் விமான நிலையத்திற்கு புறப்பட்டுச் செல்லுமாறு பயணிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக விமான சேவைகள் நிறுவனத்தின் விமான நிலைய முகாமையாளர் எச். எஸ். ஹெட்டியாராச்சி மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்லும் இலங்கை கனடா நட்புறவு வீதியோடு இணைந்ததாகவுள்ள புகையிரதப் பாதை புனரமைப்புச் செய்யப்படவுள்ளது. இதன்பொருட்டு நாளை சனிக்கிழமை இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 6 மணிவரை இவ்வீதி ஊடான வாகனப் போக்குவரத்தும் முற்றாக தடைசெய்யப்பட்டிருக்கும்.

இந்த 10 மணித்தியால காலப்பகுதியிலும் விமான நிலையத்தை நோக்கி வரும் பயணிகளின் வாகனங்களை மாற்று வீதிகளினூடாக திருப்பி விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே, மாற்று வீதிகளூடாக பயணம் செய்து, விமான நிலையத்தை வந்தடைவதற்கு அதிக நேரம் எடுக்கலம். அதனைக் கருத்திற்கொண்டே விமான நிலையத்திற்கு பயணிகள் நேர காலத்துடன் வர வேண்டியுள்ளது.

கொழும்பிலிருந்து விமானநிலையம் நோக்கி வரும் வாகனங்கள் ஜாஎல, எக்கல வீதியூடாக மினுவாங்கொடையை வந்தடைந்து, அங்கிருந்து ஆடிஅம்பலம வீதிவழியாக விமான நிலைய நுழைவாயிலை வந்தடையும். சீதுவை முச்சந்திக்கு வரும் வாகனங்கள் அங்கிருந்து ரத்தொளுகமை வீதியூடாக பழைய சீதுவை முச்சந்திக்கு திருப்பிவிடப்பட்டு பேஸ்லைன் வீதி, எவரிவத்தை ஊடாக விமான நிலையத்தை சென்றடையும்.

நீர்கொழும்பு பிரதான வீதியில் பயணிக்கும் வாகனங்கள் 18ஆம் மைற்கல் சந்திக்கு அருகிலுள்ள பன்சல வீதியூடாக திரும்பி, துளுண சந்திக்கு வந்து பேஸ்லைன் வீதியூடாக எவரிவத்தையை வந்தடைந்து விமானநிலையத்திற்கு செல்லும்.

நீர்கொழும்பிலிருந்து வரும் வாகனங்கள் தெல்வத்தை முச்சந்தியில் 50 ஏக்கர் வீதியூடாக பயணித்து கிம்புலாப்பிட்டிய முச்சந்தி வரை சென்று அங்கிருந்து ஆடிஅம்பலம ஊடாக விமான நிலையத்தை சென்றடையலாம். நீர்கொழும்பு பிரதான வீதியின் ஊடாக கல்கந்தை முச்சந்திக்கு வரும் வாகனங்கள் கிம்புலாப்பிட்டி வீதி வழியே ஆடிஅம்பல ஊடாக விமான நிலையத்தை அடையும்.
மேலும் இங்கே தொடர்க...

புலிகள் இயக்கத்தை மீளக் கட்டியெழுப்ப 7 மில்லியன் ரூபா கப்பம் கோரிய இருவர் கைது



வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்தி 7 மில்லியன் ரூபா கப்பம் கோரிய இருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இவர்கள் இருவரையும் தொடர்ந்தும் தடுத்துவைத்து விசாரணை நடத்துவதற்கு கொழும்பு பிரதான நீதிவான் அனுமதி வழங்கியுள்ளார்.

கொழும்பு கதிரேசன் வீதியைச் சேர்ந்த பீடி இலை இறக்குமதி செய்யும் வர்த்தகரான ஆறுமுகம் மாணிக்கம் சுப்பிரமணியம் எனும் வர்த்தகரிடம் இவர்கள் 7 மில்லியன் ரூபா கப்பம் கோரியிருந்தனர். பம்பலப்பிட்டியில் வசிக்கும் இந்த வர்த்தகரிடம் புலிகள் இயக்கத்ததை மீளவும் இயங்கச் செய்வதற்கு 7 மில்லியன் ரூபா வழங்கவேண்டுக்ஷீமன இவர்கள் தொலைபேசி மூலம் மிரட்டியுள்ளனர்.

இவ்வாறு பணத்தினை வழங்காவிடில் வர்த்தகருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கேடு விளைவிக்கப்படும் என்றும் இவர்கள் மிரட்டியுள்ளனர். இதனையடுத்து குறித்த வர்த்தகர் சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார்.

பணம் கொடுக்கும்போது கப்பம் கோருபவர்களை கையும் மெய்யுமாக கைது செய்வதற்கு பம்பலப்பிட்டி பொலிஸக்ஷிர் திட்டமிட்டனர். செட்டியார் தெருவிலுள்ள நகைக்கடைக்கு அண்மையில் வைத்து பணத்தை குறித்த வர்த்தகர் மிரட்டல்காரர்களிடம் கையளித்தபோது இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.

மொகமட் சலாகுதீன் மொகமட் அஸ்லம் மற்றும் இந்தியப் பிரஜையான நூர் அமித் முகமட் அஸ்ரப் ஆகிய இருவருமே பொலிஸரால் கைதுசெய்யப் பட்டவர்களாவர். இவர்களுக்கு புலிகள் இயக்கத்துடன் தொடர்பு உண்டா என விசாரணை செய்வதற்காக இருவரையும் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதிக்கும்படி குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பொலிஸார் நீதிமன்றத்தில் கோரி நின்றனர்.

இதனையடுத்து இதற்கான அனுமதியினை வழங்கிய பிரதான நீதிவான் விசாரணை அறிக்கையினை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

தென்கிழக்காசிய சமூக அபிவிருத்தி மாநாடு கொழும்பில் நடத்த தீர்மானம்



தென்கிழக்காசிய நாடுகளின் சமூக அபிவிருத்தியுடன் தொடர்புடைய அமைச்சர்களது மாநாடு எதிர்வரும் 20ஆம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது.

பிரதமர் டி.எம் ஜயரத்தன தலைமையில் நடைபெறும் இம் மாநாட்டில் இலங்கை, இந்தியா, நேபாளம், பூட்டான், பங்களாதேஷ், பாகிஸ்தான், மாலைத்தீவு, ஆப்கானிஸ்தான் ஆகிய 8 நாடுகளின் 90 பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

தூத்துக்குடி கொழும்பு படகு போக்குவரத்து இன்று ஆரம்பம்




இரண்டு ஆண்டுகளுக்குப் பின், தூத்துக்குடி கொழும்பு இடையேயான படகு மூலம் சரக்கு போக்குவரத்து, இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுகிறது.கடந்த பல ஆண்டுகளாக தூத்துக்குடியில் இருந்து கொழும்பிற்கு படகில் உணவுப் பொரு ட்கள், கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன.

பின்னர் இலங் கையில் உள் நாட்டு போர் தீவிரம் அடைந்ததால், படகு போக்குவரத்து கடந்த இரு ஆண் டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டது.

தற்போது இலங்கையில் போர் முடிந்து அமைதி திரும்பியதால், தூத்துக்குடி கொழு ம்பு சரக்கு போக்குவரத்தை, இன்று முதல் மீண் டும் இயக்க முடிவு செய்யப்பட்டது. அதற் காக, தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் நேற்றுமுன்தினம் தனியாருக்கு சொந்த மான ஒரு படகில் மஞ்சள், மக்காச்சோளம், வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்ட பொருட்கள் ஏற்றப்பட்டன. 300 தொன் சரக்குடன் இந்த படகு, நேற்று காலை தூத்துக்குடியிலிருந்து புறப்பட்டதைத் தொடர்ந்து இன்று கொழும்பை வந்தடையும் என்று தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

Feb 10, 2011

பாகிஸ்தான் இராணுவ முகாமில் குண்டுவெடிப்பு: 27 பேர் பலி


பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் உள்ள மார்டான் நகரில் உள்ள இராணுவ பயிற்சி முகாமொன்றிற்கு பள்ளிச்சீருடையில் வந்த இளைஞன் ஒருவன் நடத்திய தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 27 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் 40 பேர் இத்தாக்குதலில் காயமடைந்துள்ளதாகவும் பலரின் நிலைமை மோசமாக உள்ளதாகவும் பலியானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இராணுவத்தினர் பயிற்சி மேற்கொண்டிருந்த இடத்திற்கு வந்த பாடசாலை சீரூடை அணிந்த நபரே இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தலிபான் மற்றும் அல்-கொய்தா அமைப்புகளுக்கெதிரான பாகிஸ்தான் இராணுவத்தினரின் அதிரடி நடவடிக்கைகளுக்கு பதிலடியாகவே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதே முகாமில் கடந்த 2006 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலின் போது 36 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

யாழ். வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

அரசினால் அறிவிக்கப்பட்ட ஓய்வூதியக் கொடுப்பனவை வழங்கக் கோரி இன்று பிற்பகல் 1 மணியளவில் வங்கி ஊழியாகள் அடையாள வேலை நிறுத்தப் போராகீட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ். இலங்கை வங்கி, மக்கள் வங்கி மற்றும் இலங்கை தேசிய சேமிப்பு வங்கி ஊழியர்கள் இந்த அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுன்னாகம், சாவகச்சேரி, மானிப்பாய், சங்கானை என அனைத்து வங்கிகளிலும் இந்த அடையாள வேலை நிறுத்தம் இடம்பெற்றது. இதேநேரம் ஊர்வலமாக வந்த தேசிய சேமிப்பு வங்கி ஊழியர்களை இராணுவத்தினர் இடைநிறுத்தி விசாரணைக்கு உட்டடுத்தப்பட்ட பின்னர் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

விடுதலைப் புலிகள் ஆதரவாளர் என்ற சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது



விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மட்டக்களப்பைச் சேர்ந்த ஐவர் தம்புள்ளையில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தம்புள்ளை கண்டலம பிரதேச ஹோட்டல் ஒன்றில் தங்கி இருந்த போதே இவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

கைதின் போது இவர்களிடம் இருந்து விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் பாடல்கள், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த சில குழந்தைகளுடைய புகைப்படங்கள் மற்றும் வேறு சில ஆவணங்கள் அடங்கிய சீ.டீ என்பன கைப்பற்றப்பட்டதாக பொலீஸார் தெரிவித்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

மட்டக்களப்பு வவுணதீவு பாதை சீரமைப்புப் பணியில் புளொட் உறுப்பினர்கள்- படங்கள் இணைப்பு



மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கடும்மழை காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்;லுதல், மக்களின் அத்தியாவசிய போக்குவரத்து, நோயாளர்களை ஏற்றி இறக்குதல், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வைத்தியர்களை அழைத்துச் சென்று வருதல், மருத்துவ உதவிகள் போன்ற பணிகளுக்கு நான்கு இயந்திரப் படகுகளைக் கொண்டு புளொட் உறுப்பினர்கள் உதவி வருகின்றனர். அத்துடன் பல்வேறு பகுதிகளின் நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு சமைத்த உணவினையும் வழங்கி வருகின்றனர். புளொட் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் திரு.சூட்டி, உதவி அமைப்பாளர் திரு.கேசவன் உட்பட 30ற்கும் மேற்பட்ட புளொட் உறுப்பினர்கள் கடந்த ஒருவாரமாக இப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கொக்கட்டிச்சோலை, நாவற்காடு, வவுணதீவு, கரவெட்டி, கன்னங்குடா, சேத்துக்குடா, புதூர், ஈச்சந்தீவு, குறிஞ்சாமுனை, காரையாக்கன்தீவு, கொத்தியாவளை ஆகிய பிரதேசங்களிலேயே புளொட் உறுப்பினர்கள் இப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மட்டக்களப்பு நகரையும் வவுணதீவு பிரதேசத்தையும் இணைக்கும் வலையிறவு பாலம் ஊடான வீதி கடும்மழை காரணமாக பழுதடைந்து காணப்படுவதால் இன்று அவ்வீதியினை சீர்ப்படுத்தும் பணிகளில் வவுணதீவு பிரதேச செயலகத்துடன் இணைந்து புளொட் உறுப்பினர்களும் ஈடுபட்டுள்ளனர். நேற்றையதினம் ஈச்சந்தீவு, நாவற்காடு, கரவெட்டி பிரதேசங்களில் தங்கியுள்ள மக்களுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமைத்த உணவுப் பொதிகளையும் புளொட் உறுப்பினர்கள் வழங்கியதுடன், நேற்று வவுணதீவு பிரதேசத்தில் இடம்பெயர்ந்த மக்களுக்கு குடிநீரையும் புளொட் உறுப்பினர்கள் வழங்கியுள்ளனர்.





























































































































மேலும் இங்கே தொடர்க...

Feb 8, 2011

தபால் சேவைகள் பாதிப்பு: தேங்கிய நிலையில் பொதிகள்






நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக தபால் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பிரதான தபால் நிலையங்களில் பெருமளவு கடிதங்கள் விநியோகிக்கப்படாமல் குவிந்து கிடப்பதாக தபால் திணைக்களம் கூறியது.

தபால் நிலையங்கள் மட்டுமன்றி வீதிகள் வீடுகள் என்பனவும் நீரில் மூழ்கியுள்ளதால் கடிதங்களை விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் கூறியது.

வெள்ளம் வடிவதோடு அவற்றை துரிதமாக விநியோகிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

அடை மழை காரண மாக வடக்கு, கிழக்கு வடமத்திய மாகாணங்கள் கூடுதலாக பாதிக்கப் பட்டுள்ளன. இப்பகுதிகளில் விநியோகம் கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளதோடு ஏனைய பிரதேசங்களிலும் தபால் விநியோகிப்பதில் ஓரளவு தடங்கல் ஏற்பட்டுள்ளதாக தபால் திணைக்கள உயரதிகாரி ஒருவர் கூறினார்
மேலும் இங்கே தொடர்க...

Feb 7, 2011

நாட்டில் தொடர்ச்சியான மழை: 12,43,478 பேர் பாதிப்பு; 2,50,501 மக்கள் முகாமில்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெய்துவருகின்ற தொடர்ச்சியான மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக 18 மாவட்டங்களில் மூன்று இலட்சத்து 62 ஆயிரத்து 821 குடும்பங்களைச் சேர்ந்த 12 இலட்சத்து 43 ஆயிரத்து 478 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 67 ஆயிரத்து 508 குடும்பங்களை சேர்ந்த இரண்டு இலட்சத்து 50 ஆயிரத்து 501 பேர் இடம்பெயர்ந்த நிலையில் 689 முகாம்களில் தங்கியுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இதுவரை வெள்ளம் காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 8 பேர் காயமடைந்துள்ளதாகவும் மூவர் காணாமல் போயுள்ளனர் என்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 61 ஆயிரத்து 350 குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு இலட்சத்து 40 ஆயிரத்து 366 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 94 ஆயிரத்து 354 பேர் 197 முகாம்களில் தங்கியுள்ளனர். நாடளாவிய ரீதியில் 1161 வீடுகள் முழுமையாகவும் 8412 வீடுகள் பகுதியளவிலும் வெள்ளம் காரணமாக சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளதாவது

திருகோணமலை மாவட்டத்தில் 87 ஆயிரத்து 191 குடும்பங்களை சேர்ந்த மூன்று இலட்சத்து 24 ஆயிரத்து 556 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 21 ஆயிரத்து 220 குடும்பங்களை சேர்ந்த 78 ஆயிரத்து 510 பேர் 176 தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர். இம்மாவட்டத்தில் கந்தளாய், மூதூர், வெருகல், தம்பலகாமம் உள்ளிட்ட பல பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 61 ஆயிரத்து 350 குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு இலட்சத்து 40 ஆயிரத்து 366 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 25 ஆயிரத்து 19 குடும்பங்களைச் சேர்ந்த 94 ஆயிரத்து 354 பேர் 197 முகாம்களில் தங்கியுள்ளனர். கோரளைப்பற்று வடக்கு, கோரளைப்பற்று மேற்கு, மண்முனை மேற்கு, மண்முனை பற்று, காத்தான்குடி, எருவில்பற்று, போரதீவு பற்று, ஏறாவூர் உள்ளிட்ட பல பிரதேசங்கள் இந்த மாவட்டத்தில் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்டத்தில் 74 ஆயிரத்து 432 குடும்பங்களை சேர்ந்த இரண்டு இலட்சத்து 82 ஆயிரத்து 685 பேர் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 6558 குடும்பங்களை சேர்ந்த 24 ஆயிரத்து 923 பேர் 81 முகாம்களில் தங்கியுள்ளனர். இந்த மாவட்டத்தில் சம்மாந்துரை, நிந்தவூர், கல்முனை, இறக்காமம், சாய்ந்த மருது, காரைதீவு, ஆலையடி வேம்பு, திருக்கோவில் உள்ளிட்ட பல பிரதேசங்கள் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன.

மாத்தளை மாவட்டத்தில் 478 குடுபங்களை சேர்ந்த 1949 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 350 குடும்பங்களை சேர்ந்த 1450 பேர் ஏழு முகாம்களில் தங்கியுள்ளனர்.

அனுராதபுரம் மாவட்டத்தில் 85 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இம்மாவட்டத்தில் 11 முகாம்களில் 240 குடும்பங்களை சேர்ந்த 808 பேர் தங்கியுள்ளனர்.

வெள்ளப்பெருக்கு காரணமாக பொலன்னறுவை மாவட்டத்தில் 6124 குடும்பங்களை சேர்ந்த 20 ஆயிரத்து 739 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 5247 குடும்பங்களைச் சேர்ந்த 17 ஆயிரத்து 631 பேர் 68 முகாம்களில் தங்கியுள்ளனர். இம்மாவட்டத்தில் பல குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

பதுளை மாவட்டத்தில் 1007 குடும்பங்களை சேர்ந்த 3769 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 34 தற்காலிக முகாம்களில் 3467 பேர் தங்கியுள்ளனர்.

இதேவேளை வெள்ளப்பெருக்கு காரணமாக வவுனியா மாவட்டத்தில் 20 ஆயிரத்து 789 குடும்பங்களை சேர்ந்த 79 ஆயிரத்து 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6613 குடும்பங்களைச் சேர்ந்த 24 ஆயிரத்து 876 பேர் 79 தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர். அத்துடன் இந்த மாவட்டத்தில் 697 வீடுகள் முழுமையாகவும் 3224 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

நுவரெலியா மாவட்டத்தில் 351 குடும்பங்களை சேர்ந்த 1312 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 437 பேர் முகாம்களில் தங்கியுள்ளனர். கண்டி மாவட்டத்தில் 202 குடுங்களை சேர்ந்த 789 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். புத்தளம் மாவட்டத்தில் 249 குடும்பங்களை சேர்ந்த 764 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 முகாம்களில் 764 பேர் தங்கியுள்ளனர்.

இதேவேளை மன்னார் மாவட்டத்தில் 3351 குடும்பங்களை சேர்ந்த 12158 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மாவட்டத்தில் மடு நானட்டான் மாந்தை மேற்கு மன்னார் முசலி ஆகிய பகுதிகள் வெள்ளம் காரணமக்ஷிக பாதிக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 18 ஆயிரத்து 451 குடும்பங்களை சேர்ந்த 59 ஆயிரத்து 977 பேர் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 616 குடும்பங்களை சேர்ந்த 2048 பேர் 4 முகாம்களில் தங்கியுள்ளனர். இந்த மாவட்டத்தில் துணுக்காய் , ஒட்டுசுட்டான், மாந்தை கிழக்கு, புதுக்குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில் 3711 குடும்பங்களை சேர்ந்த 14827 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 115 குடும்பங்களை சேர்ந்த 430 பேர் 7 தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

சூரியனின் முழுப் முப்பரிமாண தோற்றம்: அதிசய படங்கள்



மனித வரலாற்றில் முதன் முறையாக சூரியனின் 360 பாகை அதாவது முழுப் முப்பரிமாண தோற்றத்தின் புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.

நாசாவினால் கடந்த 2006 ஆம் ஆண்டு விண்ணுக்கு ஏவப்பட்ட ஸ்டீரியோ எனப்படும் இரட்டை விண்வெளி ஓடங்கள் சூரியனுக்கு நேர் எதிராகப் பயணித்து இம் முப்பரிமாண படங்களை பதிவு செய்துள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

பெனாசிர் கொலை வழக்கில் முஷாரப்பின் பெயர்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ படுகொலையின் குற்றவாளி பெயர் பட்டியலில் முன்னாள் பாகிஸ்தான் ஜனாதிபதி முஷாரப்பின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

பெனாசிரின் கொலை வழக்கு தொடர்பாக புலனாய்வு அதிகாரிகள் இன்று தாக்கல் செய்த தாற்காலிக குற்றப் பத்திரிகையில் முஷாரப்பின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராவல்பிண்டி நகரில் உள்ள தீவிரவாதத் தடுப்பு நீதிமன்றத்தில் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முஷாரப் தற்போது பஹ்ரைன் நாட்டில் அரசியல் தஞ்சம் அடைந்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

உள்ளுராட்சித் தேர்தல் அமைதியான முறையில் சுகந்திரமாக நடைபெற வேண்டும்: பெப்ரல்

பிரதேச சபைகளுக்கான உள்ளுராட்சித் தேர்தல்கள் சுகந்திரமாகவும் நியாயமாகவும் நடத்த அனைவரதும் ஒத்துழைப்பு அவசியம் என சுகந்திரமானதும் நீதியானதுமான தேர்தல் கண்கானிப்பு மத்திய நிலைத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் றோஹன ஹெட்டிஆராச்சி கேட்டுக்கொண்டுள்ளார்.

அரசியல் கட்சிகளுக்கு அவர் அனுப்பியுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

‘தேர்தல் அமைதியாக நடத்தும் பொறுப்பு தேர்தல் திணைக்களத்திற்கு மட்டுமல்ல பொலிஸ் திணைக்களம், அரசியற் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளுக்கும் உரியது.

தேர்தல் சட்டத்தை அனைத்துக் கட்சிகளும் பின்பற்ற வேண்டும். தேர்தல் நடவடிக்கைகள் கிராம மட்டத்தில் இடம்பெறவிருப்பதால் சூழலுக்கு பாதகமில்லாத முறையில் பிரசாரம் மேற்கொள்ளவேண்டும்’ எனவும் கேட்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

பயணிகளின் அட்டகாசத்தால் சவூதி விமானம் இலங்கையில் அவசர தரையிறக்கம்

சவூதியிலிருந்து இந்தோனேசியா நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த விமானமொன்று இடைநடுவில் அவசரமாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று திங்கட்கிழமை தரையிறக்கப்பட்டது.

அரேபியப் பயணிகள் மதுபோதையில் முறைகேடாக நடந்துகொண்டதால் நிலைமையை சமாளிக்க முடியாததால் விமானத்தைத் தரையிறக்கியதாக விமானி குறிப்பிட்டுள்ளார்.

இவர்கள் விமானப் பயணிகளுக்கும் பணியாளர்களுக்கும் தொந்தரவு கொடுத்துள்ளனர். அவ்வாறு நடந்துகொண்ட ஐவர் விமான நிலையப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை விமான நிலைய பொலிஸார் தீவிர விசாரணைக்குட்படுத்தியதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

ஒன்பதாம் திகதி ஆர்ப்பாட்டம்: ஐ.தே.க அறிவிப்பு

எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை எதிர்வரும் 9ஆம் திகதி நடத்தத் திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் நிலவுகின்ற ஊழல், மோசடி மற்றும் பல்வேறு காரணங்களை முன்வைத்து கொழும்பு லிப்டன் சுற்று வட்டத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதேவேளை ஜே.வி.பி. எதிர்வரும் 8ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலை முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றையும் நடத்தவுள்ளதாக அதன் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

சரத் பொன்சேகா சிறையில் அடைக்கப்பட்டு ஒருவருடம் பூர்த்தியாவதையொட்டி இவ் ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா ரூ.40 கோடி பெறுமதியான நிவாரண பொருட்கள்

போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்கு ரூ.40 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்களை தமிழக அரசு வழங்கி இருப்பதாக இடைக்கால பட்ஜெட்டில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

சட்டசபையில் நிதி அமைச்சர் அன்பழகன் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் கூறப் பட்டு இருப்பதாவது:

தமிழ்நாட்டிலுள்ள இலங்கை தமிழர் முகாம்களில் அடிப்படை வசதிகளை மேம் படுத்துவதற்கு இந்த அரசால் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு முதல் கட்டமாக ரூ. 30 கோடிக்கான பணிகள் முடியும் நிலையில் உள்ளன. இரண்டாம் கட்டத்திற் கான பணிகளைத் தொடங்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம், இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கும் திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம் முதலான பல்வேறு திட்டங்களும், இந்த முகாம் களில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு விரிவுபடுத்தப்பட்டு உதவிகள் வழங்கப் பட்டு வருகின்றன.

இலங்கையில் நடைபெற்ற போரின் காரணமாக தமிழர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பைக் கருத்தில் கொண்டு, ரூ.40 கோடிக்கான நிவாரணப் பொருட்களை இந்த அரசு வழங்கியது. மத்திய அரசும் இலங்கை தமிழர் நிவாரணப் பணிகளுக்காக, ரூ.500 கோடியை வழங்கியுள்ளது.

இலங்கை தமிழர்களின் மறுவாழ்வு நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்றும், அவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர அரசியல் தீர்வு காணப்பட வேண் டும் என்றும் இந்த அரசு தொடர்ந்து வலியுறுத்தும்.

கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை இராணுவம் தொடர்ந்து வேட்டையாடும் நிலையினைக்கண்டு, தமிழக அரசின் சார்பாக பல முறை மத்திய அரசுக்கு கோரிக்கைகளை வைத்து, மத்திய அரசும் இலங்கை அரசுக்கு எடுத்துக் கூறிய போதிலும், கடற்படையினர், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தொட ர் ந்து மனிதாபிமானமற்ற செயலிலே ஈடுபட்டு, நமது மீனவர்களை கொன்று வருவதை நிறுத்தியபாடில்லை.

இதற்கொரு முற்றுப்புள்ளி வைக்கப்படாமல், தமிழக மீனவர்கள் இனியும் கொல்லப்படும் நிலை வராமல் இருக்க இறுதி முடிவினை மத் திய அரசு எடுத்தே தீர வேண்டுமென்று தமிழக அரசின் சார்பில் வலியுறுத்தி வருகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது
மேலும் இங்கே தொடர்க...

சபையில் நிறைவேற்றப்பட்ட அவசரகால சட்டப் பிரேரணை மீதான விவாதம் நாளை

அவசரகாலச்சட்ட பிரேரணை மீதான விவாதம் 118 மேலதிக வாக்குகளினால் சபையில் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி நிறைவேற்றிக்கொள்ளப்பட்டபோதிலும் அந்த பிரேரணை மீதான விவாதம் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறும்.

பாராளுமன்றத்தின் ஜனவரி மாதத்திற்கான அமர்வு கடந்த 18 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் அமெரிக்காவுக்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலில் 18 ஆம் திகதியிட்டே கையொப்பமிட்டிருந்தார்.

அந்த வர்த்தமானி அறிவித்தல் 10 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பதனால் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை மீது கடந்த 18 ஆம் திகதி விவாதமின்றி வாக்கெடுப்பு நடத்தப்பட்டு மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றிக்கொள்ளப்பட்டது. அந்த பிரேரணை மீதான விவாதமே நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறும்.

அன்றைய வாக்கெடுப்பின் போது பிரேரணைக்கு ஆதரவாக ஆளும் கட்சியை சேர்ந்த உறுப்பினர்களும், எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜனநாயகத் தேசிக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

இதன் பிரகாரம் பிரேரணைக்கு ஆதரவாக 123 வாக்குகளும், எதிராக 05 வாக்குகளும் கிடைத்தன.

இதேவேளை, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற குழுக்கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரிமாளிகையிலும், ஐக்கிய தேசியக்கட்சி பாராளுமன்ற குழுக்கூட்டம் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியிலும் இன்று திங்கட்கிழமை நடைபெறவிருக்கின்றது.
மேலும் இங்கே தொடர்க...

பொன்சேகாவின் விடுதலையை வலியுறுத்தி நாளை சத்தியாக்கிரகம்

சிறைவைக்கப்பட்டுள்ள சரத்பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி நாளை 8ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பு மகஸின் சிறைச்சாலை முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக ஜே.வி.பி. எம்.பி. விஜித ஹேரத் அறிவித்தார்.

இப்போராட்டத்தில் அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென்றும் அவர் பகிரங்க அழைப்பு விடுத்தார்.

பெலவத்தையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே விஜித ஹேரத் எம்.பி. இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இப்போராட்டமானது ஜே.வி.பி.க்காக செய்யப்படவில்லை. நாட்டு மக்களின் நன்மைக்காக ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்படவுள்ளது. எமது நாட்டின் 63ஆவது சுதந்திர தினத்தன்று சுதந்திரமாக ஜனநாயகப் பேரணியை நடாத்த முடியாதுள்ளது. ஐ.தே.கட்சி பேரணி மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம். அரசாங்கத்தின் குண்டர்களே இதனை நடத்தினர்.

எனவே, நியாயமான விசாரணைகளை எதிர்பார்க்க முடியாது. குற்றவாளிகளும் சட்டத்தின் முன் நிறுத்தப்படமாட்டார்கள்.

ஊடக நிறுவனங்கள் தீ வைக்கப்படுகின்றன. ஊடகவியலாளர்கள் தாக்கப்படுகின்றனர். இதுவரையில் எவரும் கைதுசெய்யப்படவில்லை. அரசாங்கத்தின் ஜனநாயக விரோதச்செயல்களை முழு உலகமே இன்று புரிந்துகொண்டுள்ளது.

இதனை தொடர இடமளிக்க முடியாது. எனவே, பொதுமக்கள் அச்சமின்றி போராட்டங்களுக்கு முன்வர வேண்டும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

யுத்தத்திற்கு வழிவகுத்த தவறுகளை இலங்கை கருத்திற்கொண்டுள்ளது


நாட்டைத் துண்டிப்பதற்கான ஆயுதமேந்திய நீண்ட கால பிரிவினைவாதத்தை வெற்றி கொண்டமை குறித்து இலங்கை பெருமையடைகிறது. ஆனால் 30 வருட கால யுத்தத்திற்கு வழி வகுத்த கடந்த கால தவறுகள், இடைவெளிகள் முரண்பாடுகள் குறித்தும் இலங்கை கவனம் செலுத்துகிறது என பிரான்ஸுக்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி தயான் ஜயதிலக்க கூறியுள்ளார்.

ஆயுதப் போராட்டத்தையும் பாரியளவிலான வன்முறைகளையும் நிரந்தர சமாதானமாக மாற்றும் சிக்கலானதும் கடினமானதுமான செயற்பாட்டில் இலங்கை உள்ளதாகவும் அவர் கூறினார்.

இத்தகைய சமாதானம் மக்களின் மனதிலேயே கட்டியெழுப்பப்பட முடியும். அது நீதி, சமத்துவம், ஜனநாயகம் என்பனவற்றின் அடிப்படையில் அமைய வேண்டும் எனவும் கலாநிதி ஜயதிலக கூறினார்.

பாரிஸ் நகரிலுள்ள இலங்கைத் தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கையின் 63 ஆவது சுதந்திர தின வைபவத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இவ் வைபவத்தில் இந்தியா, கியூபா, வெனிசுலா, ஜப்பான், நேபாளம், பிலிப்பைன்ஸ், ஜேர்மனி, வத்திக்கான், ஸ்லாவாக்கியா ஆகிய நாடுகளின் தூதுவர்களும் அமெரிக்கா, மலேசியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, கெமரூன், செனகல், கஸகஸ்தான், வியட்நாம், குவைத் ஆகிய நாடுகளின் பதில் தூதுவர்கள் நிரந்தர வதிவிடப் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

மட்டக்களப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புளொட் தொடர்ந்தும்


- மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கடும்மழை காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு படகுகளில் கொண்டு செல்;வதற்கும், மக்களின் அத்தியாவசிய போக்குவரத்துக்கும், மருத்துவப் பணிகளுக்கும் புளொட் உறுப்பினர்கள் உதவி வருகின்றனர். புளொட் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் திரு.சூட்டி, உதவி அமைப்பாளர் திரு.கேசவன் உட்பட 30ற்கும் மேற்பட்ட புளொட் உறுப்பினர்கள் ஆறு நாட்களாக நான்கு இயந்திரப்படகுகளைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லுதல், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மருத்துவர்களை அழைத்துச் செல்லுதல், நோயாளர்களை மட்டக்களப்பு மற்றும் நாவற்காடு வைத்தியசாலைகளுக்கு அழைத்துச் செல்லுதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கொக்கட்டிச்சோலை, நாவற்காடு, வவுணதீவு, கரவெட்டி, கன்னங்குடா, சேத்துக்குடா, புதூர், ஈச்சந்தீவு, குறிஞ்சாமுனை, காரையாக்கன்தீவு, கொத்தியாவளை ஆகிய பிரதேசங்களிலேயே புளொட் உறுப்பினர்கள் இப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதேவேளை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து வவுணதீவு, காளைபோட்டமடு, ஊத்துமடு, பாவற்கொடிச்சேனை ஆகிய இடங்களிலுள்ள நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் மக்களுக்கு 1000ற்கும் மேற்பட்ட சமைத்த உணவுப் பொதிகளையும் இன்றையதினம் புளொட் உறுப்பினர்கள் வழங்கியுள்ளனர். அத்துடன் நோய்வாய்ப்பட்ட நிலையில் மட்டுக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணமான ஒருவரின் சடலத்தினையும் இன்று பொறுப்பேற்று இயந்திரப் படகின்மூலம் கன்னங்குடா பகுதியிலுள்ள மரணமானவரின் குடும்பத்தினரிடம் புளொட் உறுப்பினர்கள் கையளித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

Jan 18, 2011

வெள்ள அனர்த்தம் சேதமடைந்த வயல் நிலங்களுக்கு 30 தினங்களுக்குள் நஷ்டஈடு


வெள்ளத்தினால் சேதமடைந்த வயல் நிலங்களுக்கு அடுத்துவரும் 30 தினங்களுக்குள் நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் விவசாயக் காப்புறுதி சபை நேற்று தெரிவித்தது.

பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள் குறித்து மதிப்பீடு செய்வதற்காக 5 குழுக்கள் கொழும்பில் இருந்து அனுப்பப்பட்டுள்ள தாக விவசாய மற்றும் விவசாயக் காப்புறுதி சபை பொது முகாமையாளர் பண்டுக வீரசிங்க கூறினார்.

வெள்ளம் காரணமாக 4 இலட்சம் ஏக்கர்களுக்கும் அதிகமான வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன்படி மட்டக்களப்பு, அனுராதபுரம், பொலன்னறுவை, அம்பாறை, திருகோணமலை ஆகிய பகுதிகளுக்கு விவசாய காப்புறுதிசபைக் குழுக்கள் சென்று சேத மதிப்பீடுகளை ஆரம்பித்துள்ளன.

வயல் நிலங்களுக்கு எத்தகைய சேதம் ஏற்பட்டுள்ளது? எவ்வளவு நஷ்டஈடு வழங்குவது என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதோடு உரிய தகவல்கள் திரட்டப்பட்ட உடன் துரிதமாக நஷ்டஈடுகள் வழங்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

விவசாய காப்புறுதி சபையில் காப்புறுதி செய்தவர்களுக்கே முதலில் நஷ்டஈடு வழங்கப்படும். காப்பு றுதி செய்யாதவர்களுக்கு நஷ்டஈடு வழங் கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான கமநல மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பு அமைச்சர் எஸ்.எம். சந்ரசேன மற்றும் இடர் முகா மைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நெல் வயல்களுக்கு மட்டுமன்றி சோள பயிர்ச் செய்கைக்காகவும் நஷ்டஈடு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

உள்ளூராட்சி தேர்தல்: திட்டமிட்டபடி 20 முதல் வேட்புமனுக்கள் ஏற்பு

திட்டமிட்டபடி வடக்கு கிழக்கு உட்பட நாடு பூராவும் 20ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்கப்பட உள்ளதாக தேர்தல் செயலகம் நேற்று தெரிவித்தது. தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆராயும் உயர் மட்ட மாநாடு நேற்று தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக் கவின் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி கள், மாவட்ட உதவித் தேர்தல் ஆணை யாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

வெள்ளப் பாதிப்பு காரணமாக கிழக்கு மாகாணத்தில் தேர்தல் ஒத்திவைப்பது குறித்து ஆராயவே இந்த கூட்டம் நடத்தப்பட்டதாக வெளியான செய்தியை தேர்தல் திணைக்களம் மறுத்தது.

தேர்தல் பணிகள் மற்றும் ஒழுங்குகள் குறித்து ஆராயவே இந்தக் கூட்டம் நடைபெற்றதாக பிரதி தேர்தல் ஆணையாளர் டபிள்யூ. பி. சுமணசிறி கூறினார். ஏற்கனவே அறிவித்த படி 20 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை வேட்புமனுக்கள் ஏற்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

முப்பது வருடங்கள் அனுபவித்த துயரங்கள் போதும்

தமிழ் மக்களின் எதிர்கால மேம்பாட்டுக்கான சகல வசதிகளையும் அரசு செய்து கொடுக்கும் - ஜனாதிபதி



தமிழ் மக்கள் முப்பது வருட காலம் அனுபவித்த துயரங்கள் போதும். அரசாங்கம் அவர்களின் எதிர்கால மேம்பாட்டுக்கான சகல வசதிகளையும் செய்து கொடுக்கும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.

யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற தேசிய பொங்கல் விழா நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு தமிழில் உரையாற்றிய ஜனாதிபதி வடக்கு மக்களின் வாழ் வாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளும் எனவும் தெரிவித்தார்.

தமிழில் தமது உரையைத் தொடர்ந்த ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது:

வடக்கின் வசந்தம் மூலம் வட பகுதி யில் பாரிய அபிவிருத்திப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. சிலர் இதனைக் குழப்ப முயற்சிக்கின்றனர். எனினும் எத்தகைய எதிர்ப்புகள் வந்தாலும் சளைக்காது செயற்பட நாம் உறுதிபூண்டுள் ளோம். நாம் சொல்வதைச் செய்வோம் செய்வதையே சொல்வோம். பயங்கரவாதத்தை ஒழிப்போம் எனக் கூறி அதனைச் செய்தோம். நாட்டை ஐக்கியப்படுத்தி சமாதான சூழலை ஏற்படுத்துவோம் என்றோம். அதனையும் செய்தோம். மக்கள் இதனை நன்குணர்வர்.

நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் உருவாக இடமளிக்க முடியாது. குறுகிய அரசியல் நோக்க மின்றி மக்களைப் பாதுகாத்து மேம்படுத்துவதில் அனைவரும் இணைந்து செயற்படுவோம். நாட்டின் அபிவிருத்தி மிக முக்கியமானது. அபிவிருத்தியில் இணைந்து செயற்படுவது அவசியம்.

வடக்கு, கிழக்கு மலையகம், தெற்கு என சகலரும் எமது மக்கள். சகல பிள்ளைகளும் எமது பிள்ளைகள். அவர்களின் எதிர்காலத்தை ஒளிமயமாக்குவோம். ஒரே கொடியின் கீழ் ஐக்கிய இலங்கையை ஒன்றிணைத்து கட்டியெழுப்புவோம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

யாழ்.தேசிய பொங்கல் விழாவுடன் குறுகிய அரசியலுக்கு முற்றுப்புள்ளி


மக்களைப் பிளவுபடுத்தும் யுகம் முடிவுக்கு வருகிறதென ஜனாதிபதி தெரிவிப்பு

* தமிழ்த் தலைவர்களும் மக்களுக்காக எம்முடன் இணைந்து செயற்பட வேண்டும்

* மாபிஃயாக்கள் ஒழிக்கப்பட வேண்டும்

* எவரும் தனித்தோ பிரிந்தோ வாழமுடியாது



குறுகிய அரசியல் நோக்கங்களைக் கைவிட்டு சகல அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று யாழ்ப்பாணத்தில் அழைப்பு விடுத்தார்.

இன, மத, குல ரீதியில் மக்களைப் பிளவுபடுத்தும் குறுகிய அரசியல் யுகத்திற்குப் பொங்கல் விழா முற்றுப்புள்ளி வைக்கும். இயல்பு நிலையை நாட்டில் ஏற்படுத்தி மக்களின் வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் எனவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

வடக்கு, கிழக்கு என்றில்லாமல் மாபிஃயா எங்கும் ஒழிக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க இடமளிக்க முடியாது எனவும் ஜனாதிபதி கூறினார்.

உள்நாட்டில் ஒன்றும் சர்வதேசத்தில் இன்னொன்றுமென கருத்துக்களை முன் வைத்து சில சக்திகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. நாட்டின் மீதும், மக்கள் மீதும் அக்கறை கொண்டவர்களாக அனைவரும் சிறந்த நாட்டைக் கட்டியெழுப்புவதில் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி அவர்கள் கேட்டுக்கொண்டார். யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற தேசிய பொங்கல் விழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது:- நாம் எந்த இனம், மதத்தைக் கொண்டிருந்தாலும் எமது கலாசாரம் பாதுகாக்கப்பட வேண்டும். மேற்கத்தேய கலாசாரத்தில் ஈர்க்கப்பட்டு செயற்படும் நமது பிள்ளைகளுக்குப் பெற்றோர் தமது கலாசாரத்தைப் பழக்க வேண்டும்.

நாட்டின் அபிவிருத்தியில் நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் போன்றே அவரவர் கலாசாரத்தைப் பாதுகாத்து செயற்படுவதிலும் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். இந்த நாட்டில் எவரும் தனித்து நின்றோ பிரிந்திருந்தோ வாழ முடியாது. நாம் இலங்கைத் தாயின் பிள்ளைகள். நாம் தனித்து நிற்கக் கூடாது. தமிழ், சிங்களம், முஸ்லிம் என நாம் ஒரே நாட்டில் ஒரே சந்ததியாக முன்னேறுவோம்.

சில அரசியல் தலைவர்கள் தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக இன, மத, குல ரீதியில் மக்களைத் தூண்டிவிட்டு பிளவுபடுத்த முயல்கின்றனர். அதற்கு ஒருபோதும் மக்கள் இடமளிக்கக் கூடாது.

ஐக்கிய இலங்கையில் ஒன்றுபட்டுவாழும் சூழலைக் கட்டியெழுப்புவதற்கு அரசியல் கட்சிகளும் தயாராக வேண்டும். யாழ்ப்பாணம் துரையப்பா அரங்கில் பொங்கல் விழா மேடையில் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஈ. பி. டி. பி. என அனைவரும் மக்களுக்காக இணைந்துள்ளோம். இதே போன்று மக்களுக்காக சேவை செய்வதில் நாம் ஒன்றுபட்டு செயற்படுதல் அவசியம்.

இனம், மதம், குலம் என மக்களை பிளவுபடுத்தும் குறுகிய அரசியல் நோக்கத்துக்கான யுகம் இந்த பொங்கலோடு நிறைவுறட்டும். பிரிவினையின்றி நாட்டில் வாழும் மக்களுக்காக உழைக்க நாம் ஒன்றிணைவோம்.

மக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு பிரதிபலனை நாம் மக்களுக்குக் காட்டியுள்ளோம். முப்பது வருட பின்தங்கிய நிலைக்குப் பின் நாம் தற்போது முன்னேற்றமடைந்த வருகிறோம்.

வடக்கு, கிழக்கு உட்பட பல்வேறு பகுதிகளிலும் அபிவிருத்தி நடைபெறுகிறது. நாம் எதைச் செய்தாலும் அதனை விமர்சிப்பதிலேயே சிலர் உள்ளனர். நாம் பாலம் கட்டினாலோ அல்லது வீடு கட்டினாலோ அவை வெளிநாட்டு நிதியில் மேற்கொள்வதாக பிரசாரம் செய்கின்றனர்.

நாட்டைக் கட்டியெழுப்ப எம்மிடம் பணம் இல்லாவிட்டால் நாம் வட்டிக்குக் கடன் பெற்றாவது அதனை நிறைவேற்றுவோம். பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில் நாமே அதனை மீளச் செலுத்துவோம்.

குறுகிய அரசியல் நோக்கத்தோடு செயற்படுபவர்கள் முன் நாம் சளைக்கமாட்டோம். இந்த நாட்டை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கு நாம் அனைவரும் உழைப்போம். தமிழ்த் தலைவர்களும் மக்களுக்காக எம்முடன் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

மங்கள வாத்தியம் முழங்க மலர் தூவி ஜனாதிபதிக்கு மகத்தான வரவேற்பு யாழ்ப்பாணத்தில் விமரிசையான விழா






அரச அனுசரணையில் தேசிய பொங்கல் விழா நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.

மதத் தலைவர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முக்கியஸ்தர்களுடன் பெருமளவில் மக்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் கலை கலாசார சமய நிகழ்ச்சிகள் பல இடம்பெற்றன.

துரையப்பா விளையாட்டரங்கில் அமைக்கப்பட்டிருந்த பிரதான மேடையில் விழா நிகழ்வுகள் இடம்பெற்றன. மைதானத்தின் மத்தியில் அமைக்கப்பட்டிருந்த விசேட அரங்கில் பொங்கல் பொங்குதல் உள்ளிட்ட சமய வழிபாடுகள் நடைபெற்றன.

தேசிய பொங்கல் விழாவிற்கு வருகை தந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இந்து சமய முறைப்படி மேள தாள நாதஸ்வர முழக்கங்களுடன் வரவேற்கப்பட்டார்.

பாதையின் இருமருங்கிலும் மகளிர் மலர்தாங்கி நிற்க 50 மேளங்கள், 50 நாதஸ்வரங்கள் உட்பட சந்தமெழுப்ப ஜனாதிபதிக்குக் கோலாகலமான வரவேற்பளிக்கப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பொங்கல் பானையில் அரிசியை இட்டு பொங்கல் கொண்டாட்டங்களை ஆரம்பித்து வைத்தார்.

அதனையடுத்து சிவாச்சாரியார்கள் ஜனாதிபதிக்குப் பொன்னாடை மற்றும் கிரீடம் அணிவித்தும் மலர் மாலை சூடியும் வரவேற்றனர்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவில் வடக்கின் பல பிரதேசங்களிலிருந்தும் பெருமளவு மக்கள் கலந்து கொண்டனர். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதியின் செய லாளர் லலித் வீரதுங்க, பிரதியமைச்சர் எம்.கே.டி.எஸ். குணவர்தன, ஈ.பி.டி.பி., தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர்கள், மாநகர மேயர், மாவட்டச் செயலாளர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பொங்கல் விழா மேடையில் உழவுத் தொழிலைக் கெளரவிக்கும் வகையில் 41 உழவு இயந்திரங்கள் ஜனாதிபதி யினால் விவசாயிகளுக்கு வழங்கப் பட்டன.

அத்துடன் 31 இந்துக் கோயில்களின் புனரமைப்புக்காக 31 இலட்சம் ரூபாவுக்கான காசோலையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறியிடம் கையளித்தார்.

அத்தோடு யாழ். பல்கலைக்கழகத்துக்குப் புதிதாகப் பிரவேசிக்கும் 100 மாணவர்களுக்கு ‘லெப்டொப்’ கணனிகள் ஜனாதிபதியினால் பரிசளிக்கப்பட்டன. ஜனாதிபதிக்கும் நாட்டுக்கும் ஆசி வழங்கும் வகையில் மும்மொழிகளில் இயற்றப்பட்ட வரவேற்புப் பாடலை இயற்றிய தர்ஷனனுக்கு ஜனாதிபதி பரிசளித்து கெளரவித்ததுடன் யாழ். மாநகர மேயர் திருமதி பற்குணராஜா ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னமொன் றையும் வழங்கி கெளரவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

பாக். இராணுவ தளபதி நாளை இலங்கை வருகை






மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் அஷ்பாக் பர்வேஷ் கயானி நாளை (19) இலங்கை வரவுள்ளார்.

விசேட விமானம் மூலம் பண்டாரநாயக்க - கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடையவுள்ள பாகிஸ்தான் இராணுவ தளபதியை இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய விமான நிலையத்தில் விரவேற்கவுள்ளார்.

மூன்று நாள் இலங்கையில் தங்கியிருக்கும் பாகிஸ்தான் இராணுவத் தளபதி நாட்டின் முக்கியஸ்தர்கள், முப்படைகளின் தளபதிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் 20ம் திகதி கொழும்பிலுள்ள இராணுவத் தலைமையகத்திற்கு விஜயம் செய்யவுள்ள பாகிஸ்தான் இராணுவத் தளபதிக்கு அங்கு விசேட மரியாதை அணிவகுப்பு வழங்கப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்து இரு நாட்டு தளபதிகளுக்கும் இடையிலான சந்திப்பும் இடம்பெறவுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...