
அரச அனுசரணையில் தேசிய பொங்கல் விழா நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.
மதத் தலைவர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முக்கியஸ்தர்களுடன் பெருமளவில் மக்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் கலை கலாசார சமய நிகழ்ச்சிகள் பல இடம்பெற்றன.
துரையப்பா விளையாட்டரங்கில் அமைக்கப்பட்டிருந்த பிரதான மேடையில் விழா நிகழ்வுகள் இடம்பெற்றன. மைதானத்தின் மத்தியில் அமைக்கப்பட்டிருந்த விசேட அரங்கில் பொங்கல் பொங்குதல் உள்ளிட்ட சமய வழிபாடுகள் நடைபெற்றன.
தேசிய பொங்கல் விழாவிற்கு வருகை தந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இந்து சமய முறைப்படி மேள தாள நாதஸ்வர முழக்கங்களுடன் வரவேற்கப்பட்டார்.
பாதையின் இருமருங்கிலும் மகளிர் மலர்தாங்கி நிற்க 50 மேளங்கள், 50 நாதஸ்வரங்கள் உட்பட சந்தமெழுப்ப ஜனாதிபதிக்குக் கோலாகலமான வரவேற்பளிக்கப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பொங்கல் பானையில் அரிசியை இட்டு பொங்கல் கொண்டாட்டங்களை ஆரம்பித்து வைத்தார்.
அதனையடுத்து சிவாச்சாரியார்கள் ஜனாதிபதிக்குப் பொன்னாடை மற்றும் கிரீடம் அணிவித்தும் மலர் மாலை சூடியும் வரவேற்றனர்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவில் வடக்கின் பல பிரதேசங்களிலிருந்தும் பெருமளவு மக்கள் கலந்து கொண்டனர். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதியின் செய லாளர் லலித் வீரதுங்க, பிரதியமைச்சர் எம்.கே.டி.எஸ். குணவர்தன, ஈ.பி.டி.பி., தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர்கள், மாநகர மேயர், மாவட்டச் செயலாளர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பொங்கல் விழா மேடையில் உழவுத் தொழிலைக் கெளரவிக்கும் வகையில் 41 உழவு இயந்திரங்கள் ஜனாதிபதி யினால் விவசாயிகளுக்கு வழங்கப் பட்டன.
அத்துடன் 31 இந்துக் கோயில்களின் புனரமைப்புக்காக 31 இலட்சம் ரூபாவுக்கான காசோலையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறியிடம் கையளித்தார்.
அத்தோடு யாழ். பல்கலைக்கழகத்துக்குப் புதிதாகப் பிரவேசிக்கும் 100 மாணவர்களுக்கு ‘லெப்டொப்’ கணனிகள் ஜனாதிபதியினால் பரிசளிக்கப்பட்டன. ஜனாதிபதிக்கும் நாட்டுக்கும் ஆசி வழங்கும் வகையில் மும்மொழிகளில் இயற்றப்பட்ட வரவேற்புப் பாடலை இயற்றிய தர்ஷனனுக்கு ஜனாதிபதி பரிசளித்து கெளரவித்ததுடன் யாழ். மாநகர மேயர் திருமதி பற்குணராஜா ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னமொன் றையும் வழங்கி கெளரவித்தார்.
மதத் தலைவர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முக்கியஸ்தர்களுடன் பெருமளவில் மக்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் கலை கலாசார சமய நிகழ்ச்சிகள் பல இடம்பெற்றன.
துரையப்பா விளையாட்டரங்கில் அமைக்கப்பட்டிருந்த பிரதான மேடையில் விழா நிகழ்வுகள் இடம்பெற்றன. மைதானத்தின் மத்தியில் அமைக்கப்பட்டிருந்த விசேட அரங்கில் பொங்கல் பொங்குதல் உள்ளிட்ட சமய வழிபாடுகள் நடைபெற்றன.
தேசிய பொங்கல் விழாவிற்கு வருகை தந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இந்து சமய முறைப்படி மேள தாள நாதஸ்வர முழக்கங்களுடன் வரவேற்கப்பட்டார்.
பாதையின் இருமருங்கிலும் மகளிர் மலர்தாங்கி நிற்க 50 மேளங்கள், 50 நாதஸ்வரங்கள் உட்பட சந்தமெழுப்ப ஜனாதிபதிக்குக் கோலாகலமான வரவேற்பளிக்கப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பொங்கல் பானையில் அரிசியை இட்டு பொங்கல் கொண்டாட்டங்களை ஆரம்பித்து வைத்தார்.
அதனையடுத்து சிவாச்சாரியார்கள் ஜனாதிபதிக்குப் பொன்னாடை மற்றும் கிரீடம் அணிவித்தும் மலர் மாலை சூடியும் வரவேற்றனர்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவில் வடக்கின் பல பிரதேசங்களிலிருந்தும் பெருமளவு மக்கள் கலந்து கொண்டனர். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதியின் செய லாளர் லலித் வீரதுங்க, பிரதியமைச்சர் எம்.கே.டி.எஸ். குணவர்தன, ஈ.பி.டி.பி., தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர்கள், மாநகர மேயர், மாவட்டச் செயலாளர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பொங்கல் விழா மேடையில் உழவுத் தொழிலைக் கெளரவிக்கும் வகையில் 41 உழவு இயந்திரங்கள் ஜனாதிபதி யினால் விவசாயிகளுக்கு வழங்கப் பட்டன.
அத்துடன் 31 இந்துக் கோயில்களின் புனரமைப்புக்காக 31 இலட்சம் ரூபாவுக்கான காசோலையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறியிடம் கையளித்தார்.
அத்தோடு யாழ். பல்கலைக்கழகத்துக்குப் புதிதாகப் பிரவேசிக்கும் 100 மாணவர்களுக்கு ‘லெப்டொப்’ கணனிகள் ஜனாதிபதியினால் பரிசளிக்கப்பட்டன. ஜனாதிபதிக்கும் நாட்டுக்கும் ஆசி வழங்கும் வகையில் மும்மொழிகளில் இயற்றப்பட்ட வரவேற்புப் பாடலை இயற்றிய தர்ஷனனுக்கு ஜனாதிபதி பரிசளித்து கெளரவித்ததுடன் யாழ். மாநகர மேயர் திருமதி பற்குணராஜா ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னமொன் றையும் வழங்கி கெளரவித்தார்.
No comments:
Post a Comment