Feb 7, 2011

பயணிகளின் அட்டகாசத்தால் சவூதி விமானம் இலங்கையில் அவசர தரையிறக்கம்

சவூதியிலிருந்து இந்தோனேசியா நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த விமானமொன்று இடைநடுவில் அவசரமாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று திங்கட்கிழமை தரையிறக்கப்பட்டது.

அரேபியப் பயணிகள் மதுபோதையில் முறைகேடாக நடந்துகொண்டதால் நிலைமையை சமாளிக்க முடியாததால் விமானத்தைத் தரையிறக்கியதாக விமானி குறிப்பிட்டுள்ளார்.

இவர்கள் விமானப் பயணிகளுக்கும் பணியாளர்களுக்கும் தொந்தரவு கொடுத்துள்ளனர். அவ்வாறு நடந்துகொண்ட ஐவர் விமான நிலையப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை விமான நிலைய பொலிஸார் தீவிர விசாரணைக்குட்படுத்தியதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment