Feb 7, 2011

ஒன்பதாம் திகதி ஆர்ப்பாட்டம்: ஐ.தே.க அறிவிப்பு

எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை எதிர்வரும் 9ஆம் திகதி நடத்தத் திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் நிலவுகின்ற ஊழல், மோசடி மற்றும் பல்வேறு காரணங்களை முன்வைத்து கொழும்பு லிப்டன் சுற்று வட்டத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதேவேளை ஜே.வி.பி. எதிர்வரும் 8ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலை முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றையும் நடத்தவுள்ளதாக அதன் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

சரத் பொன்சேகா சிறையில் அடைக்கப்பட்டு ஒருவருடம் பூர்த்தியாவதையொட்டி இவ் ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

No comments:

Post a Comment