Feb 10, 2011

யாழ். வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

அரசினால் அறிவிக்கப்பட்ட ஓய்வூதியக் கொடுப்பனவை வழங்கக் கோரி இன்று பிற்பகல் 1 மணியளவில் வங்கி ஊழியாகள் அடையாள வேலை நிறுத்தப் போராகீட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ். இலங்கை வங்கி, மக்கள் வங்கி மற்றும் இலங்கை தேசிய சேமிப்பு வங்கி ஊழியர்கள் இந்த அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுன்னாகம், சாவகச்சேரி, மானிப்பாய், சங்கானை என அனைத்து வங்கிகளிலும் இந்த அடையாள வேலை நிறுத்தம் இடம்பெற்றது. இதேநேரம் ஊர்வலமாக வந்த தேசிய சேமிப்பு வங்கி ஊழியர்களை இராணுவத்தினர் இடைநிறுத்தி விசாரணைக்கு உட்டடுத்தப்பட்ட பின்னர் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment