Feb 11, 2011

ரயிலில் மோதி இளைஞன் பலி



உடரட ரயிலில் மோதி இளைஞன் ஒருவன் உயிரிழந்த சம்பவமொன்று நேற்று அட்டன் பொலிஸ் பிரதேசத்திற்குட்பட்ட அட்டன் ரயில் நிலையத்திற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் அட்டன் சித்திர தோட்டத்தைச்சேர்ந்த அங்கப்பன் ஆண்டிராஜ் என்பவரே உயிரிழந்தவராவார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டதாக தெரிவிக்கும் அட்டன் பொலிஸார், உயிரிழந்த இளைஞன் சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் மதுபோதையில் இருந்ததாகவும் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment