Feb 10, 2011

பாகிஸ்தான் இராணுவ முகாமில் குண்டுவெடிப்பு: 27 பேர் பலி


பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் உள்ள மார்டான் நகரில் உள்ள இராணுவ பயிற்சி முகாமொன்றிற்கு பள்ளிச்சீருடையில் வந்த இளைஞன் ஒருவன் நடத்திய தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 27 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் 40 பேர் இத்தாக்குதலில் காயமடைந்துள்ளதாகவும் பலரின் நிலைமை மோசமாக உள்ளதாகவும் பலியானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இராணுவத்தினர் பயிற்சி மேற்கொண்டிருந்த இடத்திற்கு வந்த பாடசாலை சீரூடை அணிந்த நபரே இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தலிபான் மற்றும் அல்-கொய்தா அமைப்புகளுக்கெதிரான பாகிஸ்தான் இராணுவத்தினரின் அதிரடி நடவடிக்கைகளுக்கு பதிலடியாகவே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதே முகாமில் கடந்த 2006 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலின் போது 36 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

யாழ். வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

அரசினால் அறிவிக்கப்பட்ட ஓய்வூதியக் கொடுப்பனவை வழங்கக் கோரி இன்று பிற்பகல் 1 மணியளவில் வங்கி ஊழியாகள் அடையாள வேலை நிறுத்தப் போராகீட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ். இலங்கை வங்கி, மக்கள் வங்கி மற்றும் இலங்கை தேசிய சேமிப்பு வங்கி ஊழியர்கள் இந்த அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுன்னாகம், சாவகச்சேரி, மானிப்பாய், சங்கானை என அனைத்து வங்கிகளிலும் இந்த அடையாள வேலை நிறுத்தம் இடம்பெற்றது. இதேநேரம் ஊர்வலமாக வந்த தேசிய சேமிப்பு வங்கி ஊழியர்களை இராணுவத்தினர் இடைநிறுத்தி விசாரணைக்கு உட்டடுத்தப்பட்ட பின்னர் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

விடுதலைப் புலிகள் ஆதரவாளர் என்ற சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது



விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மட்டக்களப்பைச் சேர்ந்த ஐவர் தம்புள்ளையில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தம்புள்ளை கண்டலம பிரதேச ஹோட்டல் ஒன்றில் தங்கி இருந்த போதே இவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

கைதின் போது இவர்களிடம் இருந்து விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் பாடல்கள், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த சில குழந்தைகளுடைய புகைப்படங்கள் மற்றும் வேறு சில ஆவணங்கள் அடங்கிய சீ.டீ என்பன கைப்பற்றப்பட்டதாக பொலீஸார் தெரிவித்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

மட்டக்களப்பு வவுணதீவு பாதை சீரமைப்புப் பணியில் புளொட் உறுப்பினர்கள்- படங்கள் இணைப்பு



மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கடும்மழை காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்;லுதல், மக்களின் அத்தியாவசிய போக்குவரத்து, நோயாளர்களை ஏற்றி இறக்குதல், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வைத்தியர்களை அழைத்துச் சென்று வருதல், மருத்துவ உதவிகள் போன்ற பணிகளுக்கு நான்கு இயந்திரப் படகுகளைக் கொண்டு புளொட் உறுப்பினர்கள் உதவி வருகின்றனர். அத்துடன் பல்வேறு பகுதிகளின் நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு சமைத்த உணவினையும் வழங்கி வருகின்றனர். புளொட் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் திரு.சூட்டி, உதவி அமைப்பாளர் திரு.கேசவன் உட்பட 30ற்கும் மேற்பட்ட புளொட் உறுப்பினர்கள் கடந்த ஒருவாரமாக இப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கொக்கட்டிச்சோலை, நாவற்காடு, வவுணதீவு, கரவெட்டி, கன்னங்குடா, சேத்துக்குடா, புதூர், ஈச்சந்தீவு, குறிஞ்சாமுனை, காரையாக்கன்தீவு, கொத்தியாவளை ஆகிய பிரதேசங்களிலேயே புளொட் உறுப்பினர்கள் இப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மட்டக்களப்பு நகரையும் வவுணதீவு பிரதேசத்தையும் இணைக்கும் வலையிறவு பாலம் ஊடான வீதி கடும்மழை காரணமாக பழுதடைந்து காணப்படுவதால் இன்று அவ்வீதியினை சீர்ப்படுத்தும் பணிகளில் வவுணதீவு பிரதேச செயலகத்துடன் இணைந்து புளொட் உறுப்பினர்களும் ஈடுபட்டுள்ளனர். நேற்றையதினம் ஈச்சந்தீவு, நாவற்காடு, கரவெட்டி பிரதேசங்களில் தங்கியுள்ள மக்களுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமைத்த உணவுப் பொதிகளையும் புளொட் உறுப்பினர்கள் வழங்கியதுடன், நேற்று வவுணதீவு பிரதேசத்தில் இடம்பெயர்ந்த மக்களுக்கு குடிநீரையும் புளொட் உறுப்பினர்கள் வழங்கியுள்ளனர்.





























































































































மேலும் இங்கே தொடர்க...