Feb 11, 2011

ரயிலில் மோதி இளைஞன் பலி



உடரட ரயிலில் மோதி இளைஞன் ஒருவன் உயிரிழந்த சம்பவமொன்று நேற்று அட்டன் பொலிஸ் பிரதேசத்திற்குட்பட்ட அட்டன் ரயில் நிலையத்திற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் அட்டன் சித்திர தோட்டத்தைச்சேர்ந்த அங்கப்பன் ஆண்டிராஜ் என்பவரே உயிரிழந்தவராவார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டதாக தெரிவிக்கும் அட்டன் பொலிஸார், உயிரிழந்த இளைஞன் சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் மதுபோதையில் இருந்ததாகவும் தெரிவித்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

நேரகாலத்துடன் விமான நிலையத்துக்கு வருமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தல்



கட்டுநாயக்க, பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தினூடாக எதிர்வரும் 12ஆம், 13ஆம் திகதிகளில் வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகள், தாம் பயணம் செய்யவுள்ள விமானம் புறப்படுவதற்கு 4 மணித்தியாலங்களுக்கு முன்னராகவே விமான நிலையத்திற்கு வர வேண்டும் என்று ஸ்ரீலங்கன் விமான நிலையத்திற்கு செல்லும் இலங்கை கனடா நட்புறவு வீதி மூடப்படுவதன் காரணமாகவே நேரகாலத்துடன் விமான நிலையத்திற்கு புறப்பட்டுச் செல்லுமாறு பயணிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக விமான சேவைகள் நிறுவனத்தின் விமான நிலைய முகாமையாளர் எச். எஸ். ஹெட்டியாராச்சி மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்லும் இலங்கை கனடா நட்புறவு வீதியோடு இணைந்ததாகவுள்ள புகையிரதப் பாதை புனரமைப்புச் செய்யப்படவுள்ளது. இதன்பொருட்டு நாளை சனிக்கிழமை இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 6 மணிவரை இவ்வீதி ஊடான வாகனப் போக்குவரத்தும் முற்றாக தடைசெய்யப்பட்டிருக்கும்.

இந்த 10 மணித்தியால காலப்பகுதியிலும் விமான நிலையத்தை நோக்கி வரும் பயணிகளின் வாகனங்களை மாற்று வீதிகளினூடாக திருப்பி விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே, மாற்று வீதிகளூடாக பயணம் செய்து, விமான நிலையத்தை வந்தடைவதற்கு அதிக நேரம் எடுக்கலம். அதனைக் கருத்திற்கொண்டே விமான நிலையத்திற்கு பயணிகள் நேர காலத்துடன் வர வேண்டியுள்ளது.

கொழும்பிலிருந்து விமானநிலையம் நோக்கி வரும் வாகனங்கள் ஜாஎல, எக்கல வீதியூடாக மினுவாங்கொடையை வந்தடைந்து, அங்கிருந்து ஆடிஅம்பலம வீதிவழியாக விமான நிலைய நுழைவாயிலை வந்தடையும். சீதுவை முச்சந்திக்கு வரும் வாகனங்கள் அங்கிருந்து ரத்தொளுகமை வீதியூடாக பழைய சீதுவை முச்சந்திக்கு திருப்பிவிடப்பட்டு பேஸ்லைன் வீதி, எவரிவத்தை ஊடாக விமான நிலையத்தை சென்றடையும்.

நீர்கொழும்பு பிரதான வீதியில் பயணிக்கும் வாகனங்கள் 18ஆம் மைற்கல் சந்திக்கு அருகிலுள்ள பன்சல வீதியூடாக திரும்பி, துளுண சந்திக்கு வந்து பேஸ்லைன் வீதியூடாக எவரிவத்தையை வந்தடைந்து விமானநிலையத்திற்கு செல்லும்.

நீர்கொழும்பிலிருந்து வரும் வாகனங்கள் தெல்வத்தை முச்சந்தியில் 50 ஏக்கர் வீதியூடாக பயணித்து கிம்புலாப்பிட்டிய முச்சந்தி வரை சென்று அங்கிருந்து ஆடிஅம்பலம ஊடாக விமான நிலையத்தை சென்றடையலாம். நீர்கொழும்பு பிரதான வீதியின் ஊடாக கல்கந்தை முச்சந்திக்கு வரும் வாகனங்கள் கிம்புலாப்பிட்டி வீதி வழியே ஆடிஅம்பல ஊடாக விமான நிலையத்தை அடையும்.
மேலும் இங்கே தொடர்க...

புலிகள் இயக்கத்தை மீளக் கட்டியெழுப்ப 7 மில்லியன் ரூபா கப்பம் கோரிய இருவர் கைது



வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்தி 7 மில்லியன் ரூபா கப்பம் கோரிய இருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இவர்கள் இருவரையும் தொடர்ந்தும் தடுத்துவைத்து விசாரணை நடத்துவதற்கு கொழும்பு பிரதான நீதிவான் அனுமதி வழங்கியுள்ளார்.

கொழும்பு கதிரேசன் வீதியைச் சேர்ந்த பீடி இலை இறக்குமதி செய்யும் வர்த்தகரான ஆறுமுகம் மாணிக்கம் சுப்பிரமணியம் எனும் வர்த்தகரிடம் இவர்கள் 7 மில்லியன் ரூபா கப்பம் கோரியிருந்தனர். பம்பலப்பிட்டியில் வசிக்கும் இந்த வர்த்தகரிடம் புலிகள் இயக்கத்ததை மீளவும் இயங்கச் செய்வதற்கு 7 மில்லியன் ரூபா வழங்கவேண்டுக்ஷீமன இவர்கள் தொலைபேசி மூலம் மிரட்டியுள்ளனர்.

இவ்வாறு பணத்தினை வழங்காவிடில் வர்த்தகருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கேடு விளைவிக்கப்படும் என்றும் இவர்கள் மிரட்டியுள்ளனர். இதனையடுத்து குறித்த வர்த்தகர் சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார்.

பணம் கொடுக்கும்போது கப்பம் கோருபவர்களை கையும் மெய்யுமாக கைது செய்வதற்கு பம்பலப்பிட்டி பொலிஸக்ஷிர் திட்டமிட்டனர். செட்டியார் தெருவிலுள்ள நகைக்கடைக்கு அண்மையில் வைத்து பணத்தை குறித்த வர்த்தகர் மிரட்டல்காரர்களிடம் கையளித்தபோது இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.

மொகமட் சலாகுதீன் மொகமட் அஸ்லம் மற்றும் இந்தியப் பிரஜையான நூர் அமித் முகமட் அஸ்ரப் ஆகிய இருவருமே பொலிஸரால் கைதுசெய்யப் பட்டவர்களாவர். இவர்களுக்கு புலிகள் இயக்கத்துடன் தொடர்பு உண்டா என விசாரணை செய்வதற்காக இருவரையும் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதிக்கும்படி குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பொலிஸார் நீதிமன்றத்தில் கோரி நின்றனர்.

இதனையடுத்து இதற்கான அனுமதியினை வழங்கிய பிரதான நீதிவான் விசாரணை அறிக்கையினை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

தென்கிழக்காசிய சமூக அபிவிருத்தி மாநாடு கொழும்பில் நடத்த தீர்மானம்



தென்கிழக்காசிய நாடுகளின் சமூக அபிவிருத்தியுடன் தொடர்புடைய அமைச்சர்களது மாநாடு எதிர்வரும் 20ஆம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது.

பிரதமர் டி.எம் ஜயரத்தன தலைமையில் நடைபெறும் இம் மாநாட்டில் இலங்கை, இந்தியா, நேபாளம், பூட்டான், பங்களாதேஷ், பாகிஸ்தான், மாலைத்தீவு, ஆப்கானிஸ்தான் ஆகிய 8 நாடுகளின் 90 பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

தூத்துக்குடி கொழும்பு படகு போக்குவரத்து இன்று ஆரம்பம்




இரண்டு ஆண்டுகளுக்குப் பின், தூத்துக்குடி கொழும்பு இடையேயான படகு மூலம் சரக்கு போக்குவரத்து, இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுகிறது.கடந்த பல ஆண்டுகளாக தூத்துக்குடியில் இருந்து கொழும்பிற்கு படகில் உணவுப் பொரு ட்கள், கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன.

பின்னர் இலங் கையில் உள் நாட்டு போர் தீவிரம் அடைந்ததால், படகு போக்குவரத்து கடந்த இரு ஆண் டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டது.

தற்போது இலங்கையில் போர் முடிந்து அமைதி திரும்பியதால், தூத்துக்குடி கொழு ம்பு சரக்கு போக்குவரத்தை, இன்று முதல் மீண் டும் இயக்க முடிவு செய்யப்பட்டது. அதற் காக, தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் நேற்றுமுன்தினம் தனியாருக்கு சொந்த மான ஒரு படகில் மஞ்சள், மக்காச்சோளம், வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்ட பொருட்கள் ஏற்றப்பட்டன. 300 தொன் சரக்குடன் இந்த படகு, நேற்று காலை தூத்துக்குடியிலிருந்து புறப்பட்டதைத் தொடர்ந்து இன்று கொழும்பை வந்தடையும் என்று தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...