புத்தளம் மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகளுக்காக அரசு 726 மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.
புத்தளம் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்திற்கு தலைமை வகித்து உரையாற்றிய ஜனாதிபதியின் ஆலோசகரும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.
வெள்ளியன்று (17.09.2010) புத்தளம் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைச்சர்களான ராஜித சேனாரத்தின, மஹிந்த யாப்பா அபேவர்தன, மில்ரோய் பர்னாந்து, தயாசித்த திசேரா, பிரதி அமைச்சரான நியூமல் பெரேரா, பாராளு மன்ற உறுப்பினர் விக்டர் என்டனி பெரேரா மற்றும் மாகாண சபை அமைச்சர் சனத் நிஸாந்த உள்ளிட்ட மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைத் தலைவர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு திணைக்களத்திலும் நடந்து முடிந்த அபிவிருத்திப் பணிகள், நடக்க வேண்டிய அபிவிருத்திகள் பற்றியும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இங்கு தெரிவிக்கப்பட்ட பலவித குறைகளையும் கேட்டறிந்த அமைச்சர் பசில் அவற்றை விரைவில் தீர்த்து வைப்பதாகவும் தெரிவித்தார்.
அமைச்சர் பசில் ராஜபக்ஷ தனதுரையில் மேலும் கூறியதாவது :-
அபிவிருத்தித் திட்டப் பணிகள் மக்களின் காலடிக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் ஜனாதிபதியின் விருப்பமாகும். அதேபோன்று அரச அதிகாரிகள் மக்களுடன் ஒன்றிணைந்து அபிவிருத்திப் பணிகளை ஆற்ற வேண்டும்.
உங்களின் பூரண ஒத்துழைப்பு கிடைக்கும் இடத்து இவ்வருடத்தில் 8 சதவிகிதத்திற்கும் மேலாக அபிவிருத்திப் பணிகளை எட்டமுடியும்.
விவசாயத்திற்கும், மீன்பிடிக்கும் சிறந்த இடமாக புத்தளம் மாவட்டம் திகழ்கிறது.
மற்றொரு விசேஷத்தையும் புத்தளம் மாவட்டம் பெறுகின்றது. இலங்கையின் ஆகக் கூடிய மின் உற்பத்தியான நுரைச் சோலை அனல் மின் திட்டத்தின் மூலம் 900 மெகாவாட் மின் உற்பத்தி பெறப் படவுள்ளது
No comments:
Post a Comment