Nov 24, 2010

பொன்சோகவிற்கு சிறையில் உடற்பயிற்சி கருவிகள்






இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு சிறையில் உடற்பயிற்சி கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இலங்கையில் விடுதலைப் புலிகளை ஒழிக்க நடந்த சண்டையை தலைமை ஏற்று நடத்தியவர், முன்னாள் தளபதி சரத் பொன்சேகா. கடந்த ஜனவரி மாதம் நடந்த அதிபர் தேர்தலில் இவர் அதிபர் ராஜபக்ஷேவை எதிர்த்து போட்டியிட்டார். இதை தொடர்ந்து இவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த ராணுவ கோர்ட் இவருக்கு 30 மாத சிறை தண்டனை அளித்துள்ளது.

கடந்த 2006ம் ஆண்டு விடுதலைப் புலிகளின் தற்கொலை படை தாக்குதலில் பொன்சேகா பலத்த காயமடைந்தார். அதனால் ஏற்பட்ட உடல் பாதிப்புகள் காரணமாக, தற்போதும் அவர் மருந்துகள் உட்கொண்டு வருகிறார். உடல் நலத்தை பேணுவதற்கு வசதியாக உடற்பயிற்சி கருவிகளை அவருக்கு வழங்கும் படி கோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து அவருக்கு தற்போது உடற்பயிற்சி கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. பலத்த மழையினால் அவர் அடைக்கப்பட்டுள்ள சிறை அறையில் தண்ணீர் கசிவதால் கூரையை பழுது பார்க்கும் பணி நடக்கிறது.
மேலும் இங்கே தொடர்க...

அதிக வெப்பமாகும் ஏரிகள் : "நாசா' ஆய்வில் தகவல்

உலகம் முழுவதும் கடந்த 25 ஆண்டுகளாக ஏரிகள் சூடாகி வருவதாக "நாசா' ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் "நாசா' மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஸ்நீடர், சைமன் ஹூக் ஆகியோர் செயற்கைக் கோள் அளித்த விவரங்களை வைத்து, உலகம் முழுவதும் உள்ள 167 பெரிய ஏரிகளை ஆய்வு செய்தனர். கடந்த 85ம் ஆண்டு முதல் ஏரிகளின் வெப்பநிலை குறித்து ஆய்வு செய்த போது, சில ஏரிகள் 1.8 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெப்பநிலை உயர்ந்து காணப்பட்டதாக இவர்கள் தெரிவித்துள்ளனர்.

வடக்கு ஐரோப்பாவில் உள்ள ஏரிகள் அதிகம் வெப்பமடைந்து காணப்படுகின்றன. சைபீரியா, மங்கோலியா, வடக்கு சீனா பகுதிகளில் மிதமான வெப்பம் அதிகரித்துள்ளது. பூமி கோளத்துக்கு தெற்குப் பகுதியில் உள்ள ஏரிகளில் அவ்வளவாக வெப்பம் உயரவில்லை. வடக்கு ஐரோப்பாவில் ஏரிகளை சுற்றியுள்ள காற்று பகுதியை விட, தண்ணீர் பகுதியில் வெப்பம் அதிகரித்துள்ளது. ஏரிகளின் வெப்பம் அதிகரிப்பதால் பாசி அதிகம் படிந்து, மீன் இனம் அழியும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக இந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

ஈழத்தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு : கருணாநிதி கிருஷ்ணாவிடம் வலியுறுத்து

இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் அரசியல் தீர்வொன்றுக்கு வலியுறுத்துமாறு தமிழக முதல்வர் மு.கருணாநிதி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருடி;ணாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கைக்கு 4 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வெளியுறவுத்துறை அமைச்சர் நாளை வருகை தரவுள்ளார்.

"மீளக்குடியமர்த்தப்படாமல் 30 ஆயிரம் மக்கள் முகாம்களில் தங்கியுள்ளனர். இது கவலைக்குரிய விடயமாகும். இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இவ்விடயம் தொடர்பாக கவனத்தில் எடுக்க வேண்டும்" என மு.கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 50 ஆயிரம் வீடுகளைக் கட்டிக் கொடுக்கும் நிகழ்ச்சித் திட்டத்தினை உரிய காலத்திற்குள் பூர்த்தி செய்து கொடுக்கும்படி இந்திய அரசிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

வத்தளையில் தமிழ் வர்த்தகர் ஒருவரை காணவில்லை

வத்தளையில் பகுதியில் வர்த்தகர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக வத்தளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை 10 மணியளவில் தலைமயிர் வெட்டுவதற்காக சென்ற வர்த்தகர் ஒருவரே காணாமல் போயுள்ளார்.

வத்தளை அல்விஸ் பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய கணபதி குணரத்தன என்பவரே காணமல் போயுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...