Sep 17, 2010

மட்டு. வெடிப்புச் சம்பவம்: வைத்தியசாலையில் கதறியழும் உறவுகள்

போதனா வைத்தியசாலையில் கூடியுள்ள காயமடைந்தவர்களின் உறவினர்கள் கதறி அழுவதாகவும் காயமடைந்தோரைப் பார்வையிட பெருந்திரளான மக்கள் வைத்தியாசாலையில் கூடியுள்ளதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் நிலையத்தின் வளாகத்தில் இன்று முற்பகல் பாரிய வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றது. இச் சம்பவத்தில் காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த மூவர் மரணமடைந்துள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் முருகானந்தன் வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

இவர்களில் இருவர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் எனவும் மற்றையவர் சீன நாட்டுப் பிரஜையெனவும் அவர் குறிப்பிட்டார். இச்சம்பவத்தில் காயமடைந்த 52 பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இதுவரையில் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவர்களில் மூவர் மரணமடைந்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

மட்டு. வெடிப்பு சம்பவத்தில் 60 பேர் வரை உயிரிழப்பு-



மட்டு. வெடிப்பு சம்பவத்தில் 60 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வைத்தியசாலையில் சற்று முன்னர் வரை பொலிஸ் உத்தியோகஸ்தர் பொதுமக்கள் உட்பட 25 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வைத்தியசாலையிலிருந்து எமது செய்தியாளர் தரும் தகவல்
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையர் உட்பட 31 பேர் கொரியாவிலிருந்து நாடு கடத்தல்

இலங்கையர்கள் உள்ளிட்ட 31 பேர் கொரியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டு ள்ளனர். கொரியாவில் பல குற்றச் செயல்க ளில் இவர்கள் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

கொரிய விமான நிலையத்தில் கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட கைவிரல் அடையாளம் பெறும் புதிய திட்டத்தினை அடுத்தே அவர்கள் குற்றவாளிகளாக இனங் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் குற்றச் செயல்கள் மற்றும் விசா காலாவதியாகியும் கொரியாவில் வசித்து வருகின்றமை உள்ளிட்ட செயற் பாடுகளில் ஈடுபட்டுள்ளமை கண்டறி யப்பட்டுள்ளதாக கொரிய நீதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

துப்பாக்கிச் சூட்டில் சிறுவன் கொல்லப்பட்ட விவகாரம்: 5 பொலிஸ் உட்பட 9 பேர் கைது; இரு அத்தியட்சகர்கள் இடமாற்றம்






பேருவளையில் பொலிஸாருக்கும் கொள்ளைக் கோஷ்டியொன்றுக் குமிடையே இடம்பெற்ற துப்பாக்கிச் சமரில் ஏழு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஐந்து பொலிஸார் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இரண்டு பொலிஸ் அத்தியட்சகர்கள் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

இச்சம்பவம் நேற்று முன்தினம் புதன்கிழமை இடம்பெற்றது. சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனக் கருதப்படும் மகரகம பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த ஐந்து பொலிஸாரும் நான்கு பொது மக்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் நுகேகொடை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தேசபந்து தென்னகோன் மற்றும் மிரிஹானை பொலிஸ் பிரிவுக்குப் பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் சேனாபதி ஆகியோர் நேற்று பொலிஸ் களப்பிரிவு தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

பேருவளை நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வைத்து கொள்ளைக் கோஷ்டியினரை சுற்றி வளைத்துப் பிடிக்கும் நோக்கில் பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்குமிடையில் துப்பாக்கிச் சமர் இடம்பெற்றது.

இதன்போது அப்பகுதியில் முச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்த 07 வயது சிறுவன் ஒருவன் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததுடன் அவனது தந்தை காயங்களுக்கு உள்ளானார். சம்பவத்தின்போது தப்பிச் சென்ற கொள்ளைக் கோஷ்டியினரை கைது செய்ய விசேட பொலிஸ் குழுவொன்று அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் நேற்று 16 ஆம் திகதி மாலை களுத்துறை மேலதிக நீதவான் நாமல் பெரேரா முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட போது எதிர் வரும் 30 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

ஐ. நா. மாநாடு: ஜனாதிபதி தலைமையிலான குழு நியூயோர்க் பயணம்





ஐ. நா. வின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழு நியூயோர்க்கிற்கு புதன்கிழமை பயணமானது. முற்பகல் 11.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட யூ. எல். 503 இலக்கமுடைய லண்டன் செல்லும் விமானத்தில் இக் குழு பயணமானது.

ஜனாதிபதி தலைமையிலான குழுவில், வெளி விவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் அடங்குகின்றனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் உச்சி மாநாடு எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கின்றது. இந்த மாநாட்டில் ஈமிலேனியம் அபிவிருத்தி இலக்குகள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்படும்.

ஐக்கிய நாடுகளின் 65 ஆவது பொதுச் சபை அமர்வுகள் கடந்த 14 ஆம் திகதி ஆரம்பமாகியுள்ளது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை உலகத் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு நடைபெறும். அந்த மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றுவார்.அமைச்சர்களின் பொது விவாதங்களுக்கான அமர்வுகள் உச்சி மாநாடு எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகும்.

உச்சி மாநாட்டில் ஈமிலேனியம் அபிவிருத்தி இலக்குகள் எனும் தலைப்பில் மட்டுமல்லாது கால நிலை மாற்றம், உணவு பாதுகாப்பு, பாதிக்கப்பட்ட நாடுகளின் மீளமைப்பு, பாதுகாப்பு சபை மறு சீராக்கல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்படவு ள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

பிரபாகரன் மக்களுக்கு ஏற்படுத்தியுள்ள அழிவுகளை ஒவ்வொருவரும் மீட்டிப்பார்க்க வேண்டும் பூநகரி மாவீரர் கிராமத்தில் ரங்கா எம்.பி உரை

வன்னியை முப்பது வருடங்களாகத் தம் ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்த பிரபாகரன் அப்பிரதேசங்களின் அபிவிருத்திக்கோ, அங்கு வாழ்கின்ற மக்களின் மேம்பாட்டுக்கோ எதுவும் செய்யவில்லை. மாறாக பிரபாகரனிட மிருந்து மக்களுக்கு இன்று எஞ்சி இருப்பது அழிவுகள் மாத்திரமே.

இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்கா தெரிவித்தார். பிரபாகரனின் தேவைக்காக தம் உயிர்களை அர்ப்பணித்த வர்களின் குடும்ப உறுப்பினர் களின் நலன்புரி நடவடிக்கை களை கூட இன்று அரசாங்கமே மேற் கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முல்லைத்தீவு மாவட்டத்தி லுள்ள பூநகரி பிரதேசத்தி லுள்ள மாவீரர் கிராமத்திலி ருக்கும் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்ற வைபவ த்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்ட வாறு கூறினார்.

இக்கிராமத்திலுள்ள பாடசாலையின் தேவைகளை இனம் காண்பதற்காகவும், அங்கு கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு பாடசாலை உபகரணங்களை பகிர்ந்தளிப்பதற்காகவும் இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் தலைவரும், ஹம்பாந்தோட்டை மாவட்ட எம்.பியுமான நாமல் ராஜபக்ஷ தலைமையில் புதிய இளம் எம்.பிக்கள் குழு நேற்று முன்தினம் இக்கிராமத்திற்கு விஜயம் செய்தது.

பிரபாகரனின் தேவைக்காக தம் உயிரை அர்ப்பணித்தவர்களின் உறவினர்களது ஐநூறு குடும்பங்கள் இருக்கிராமத்தில் வசிக்கின்றன. இக்கிராமம் ஏற்கனவே முத்தப்பன் கிராமம் என அழைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் எம்.பி. நாமல் ராஜபக்ஷ பாடசாலை உகரணங்களைப் பகிர்ந்தளித்தார்.

இந்நிகழ்வில் எம்.பி. ரங்கா தொடர்ந்தும் உரையாற்றுகையில், வடபகுதியை அபிவிருத்தி செய்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த ஒரு வருட காலமாக பாரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார். ஆனால் தமிழ் மக்களின் தலைவர் என்று கூறிய பிரபாகரன் கடந்த முப்பது வருடங்களாக வட பகுதி மக்களுக்கு ஏற்படுத்தியுள்ள அழிவுகளை ஒவ்வொருவரும் மீட்டிப் பார்க்க வேண்டும்.

அவர் இப்பிரதேசத்தை தம் ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்தபோது ஒரு பாடசாலையையே, குளத்தையோ அபிவிருத்தி செய்தாரா? இல்லவே இல்லை. தமது மக்களின் வாழ்வையே இவர் அழித்து நாசப்படுத்தினார். அந்த அழிவுதான் தமிழ் மக்களுக்கு எஞ்சியுள்ளது. தமது மக்களுக்கு மரணத்தைப் பெற்றுக்கொடுத்து அவர் தம் மக்களுக்கு வழங்கிய விடுதலை தான் என்ன.

நான் அரச சார்பு எம்.பி. அல்ல. ஆனால் தமிழ் மக்களுக்கு அரசாங்கம் செய்யும் சேவைகளைப் பார்த்தே நான் அரச பக்கம் சார்ந்தேன்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டை இருபது வருடங்களுக்கும் மேல் ஆட்சி செய்ய வேண்டும். இந்தக் காலப் பகுதியில் அவர் முழு நாட்டிலும் குறிப்பாக வட பகுதியிலும் சுபிட்சத்தை ஏற்படுத்தித் தருவார். அதனால் எதிர்காலத்தில் தமிழ் இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்ள வேண்டியதில்லை. நாட்டுக்கென்று உயிரை மாய்த்துக்கொள்வதும் அவசியமில்லை. மாறாக நாட்டுக்குச் சேவை செய்யக்கூடியவர்களாக இப்பிள்ளைகள் மாறவேண்டும்.

அதற்குத் தேவையான கல்வியையோ, தொழிற் பயிற்சியையோ பெற்று தம்மை மேம்படுத்திக்கொள்வது அவசியம். இதற்குத் தேவையான வேலைத் திட்டங்களை அரசாங்கம் தற்போது ஆரம்பித்துள்ளது என்றார்.

இந்நிகழ்வில் எம்.பிக்களான உதித லொக்குபண்டார, ஷெஹான் சேமசிங்க, கணக ஹேரத் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.
மேலும் இங்கே தொடர்க...

வட்டக்கச்சியில் ரூ. 20 மில்லியன் செலவில் இரு பாடசாலை கட்டடங்கள்






முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வட்டக்கச்சியில் இரண்டு பாடசாலைக ளில் 20 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள கட்டிடங்களுக்கான அடிக்கல் நேற்று நடப்பட்டது.

இளைஞர்களுக்கான நாளைய அமைப்பின் தலைவர் நாமல் ராஜபக்ஷ எம்.பி, வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி ஆகியோர் நேற்று அடிக்கல் நாட்டினர்.

வட்டக்கச்சி பிரதேசத்தில் மீளக்குடியமர்த்தப்பட்ட மாணவ, மாணவிகளின் கல்வி நடவடிக்கையை கருத்திற் கொண்டு வட மாகாண கல்வி அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்ட தற்காலிக கற்கை நிலையங்கள் இரண்டு நேற்று திறந்து வைக்கப்பட்டதாக ஆளுநர் தெரிவித் தார்.

தலா 5 மில்லியன் ரூபா செலவில் நான்கு நிரந்தர கட்டிடங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளது என்றும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளிலுள்ள பல பாடசாலைகளுக்கு நேரில் விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்த இந்தக் குழுவினர் அங்கு நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

யாழ்ப்பாணத்தில் மேலும் 3000 ஏக்கரில் நெற்செய்கை






யாழ்ப்பாணத்தில் அடுத்த பெரும் போகத்தின் போது மேலும் மூவாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிர் செய்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக் குழுக் கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப் பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பயிர்ச் செய்கைகளை துரிதமாக மேற்கொள்வதற்கு வசதியாக இம்மாத இறுதிக்குள் தென்மராட்சி, அராலி போன்ற பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை துரிதமாக அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும், வட மாகாண ஜனாதிபதி செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக் கொண்டதாக ஆளுநர் சுட்டிக் காட்டினார்.

யாழ்ப்பாணத்தில் தற்போது மேற் கொள்ளப்பட்டுவரும் பயிர் செய்கை களுக்கு மேலதிக மாகவே 3000 ஏக்கர் நிலப்பரப்பில் பயிர் செய்கைகளை மேற் கொள்ள தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

நிவாரணக் கிராமங்களில் இன்னும் 25,000 பேர் மாத்திரமே







இடம்பெயர்ந்த மக்களில் சுமார் 25 ஆயிரம் பேரே மீள்குடியேற்றுவதற்காக எஞ்சியுள்ளனர். இவர்களில் அதிகமானவர் கள் காலையில் வேலைக்குச் சென்று விட்டு மாலை வீடு திரும்புவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. நிவாரணக் கிராமங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

10 வீதமானவர்களே மீள்குடியேற்றப்பட வேண்டியுள்ளனர்.

இவர்கள் முகாம்களில் வைக்கப்பட்டுள் ளதாக கூற முடியாது. ஏனென்றால் அவர்கள் தினமும் தொழிலுக்குச் சென்று மாலையில் திரும்பி வருகின் றனர்.
மேலும் இங்கே தொடர்க...