Oct 29, 2010

முதல்வர் துரோகம்: வைகோ






காவிரி பிரச்னையில், கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுடன் இணைந்து, முதல்வர் கருணாநிதி துரோகம் இழைத்து விட்டார்,'' என, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ கூறினார்.அவர், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:காவிரி, பாலாறு, முல்லைப் பெரியாறு பிரச்னைகளில், ஆரம்பத்திலிருந்து முதல்வர் கருணாநிதி துரோகம் செய்து வருகிறார். தனது குடும்பத்தினருக்கு பதவி பெறுவதில் தான் அவர் அக்கறை காட்டினார்."கர்நாடகாவில் மழை பெய்யவில்லை; பின், எப்படி தண்ணீர் வரும்' என்ற கேள்வியை கேட்டவரே முதல்வர் கருணாநிதி. கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுடன் இணைந்து, முதல்வர் கருணாநிதி துரோகம் செய்து விட்டார்.கர்நாடக அரசும் தண்ணீர் தர முடியாது என கூறியுள்ளது. இதை மத்திய அரசும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இது இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஊறு விளைவிக்கும் செயல்.இவ்வாறு வைகோ கூறினார்.

No comments:

Post a Comment