Oct 29, 2010

வீட்டு வசதி சங்கங்களில் கடன் வாங்கியவர்கள், நிலுவையைத் திருப்பிச் செலுத்துவதற்கான சலுகைத் திட்டத்தில் கால அவகாசம்

வீட்டு வசதி சங்கங்களில் கடன் வாங்கியவர்கள், நிலுவையைத் திருப்பிச் செலுத்துவதற்கான சலுகைத் திட்டத்தில் கால அவகாசம், அடுத்த ஆண்டு ஜூன் வரை நீட்டிக்கப்படும்' என, முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:நகர்ப்புற மற்றும் கிராம வீட்டு வசதித் திட்டங்களில், கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் வீடுகள் கட்டுவதற்காக பலர் கடன்கள் பெற்றிருந்தனர்.

பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர், குறைந்த வருவாய்ப் பிரிவினர், நடுத்தர வருவாய்ப் பிரிவினர், உயர் வருவாய்ப் பிரிவினர் என அனைவரும் 2008ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை நிலுவையில் இருந்த கடன்களை திருப்பிச் செலுத்துவதற்காக அரசின் சார்பில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டன.இவர்கள் குறைந்தளவிலான குறிப்பிட்ட கடன் தொகையையும், வட்டியையும் 2008ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதிக்குள் செலுத்தினால், அவர்களது மீதமுள்ள கடன் மற்றும் அபராத வட்டித்தொகை தள்ளுபடி செய்யப்படும் எனக் கூறப்பட்டது.

பின் அச்சலுகை 2008ம் ஆண்டு டிசம்பர், 2009ம் ஆண்டு மார்ச் என இருமுறை நீட்டிக்கப்பட்டது. தற்போது பலரும் பயனடையும் வகையில், இத்திட்டத்தில் அளிக்கப்படும் சலுகைகளை 2011ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படும் என, முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment