முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக் குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவில் மக்களை மீள் குடியேற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முல்லைதீவு அரச அதிபர் வேத நாயகம் நேற்று கூறினார். இதன்படி முதலில் விஸ்வமடு மேற்குப் பிரதேசத்தில் 306 குடும்பங்களைச் சேர்ந்த 989 பேர் மீள் குடியேற்ற ப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது புதுக்குடியிருப்பு பிரதேசத்திலே புலிகள் பெருமளவான ஆயுதங்க ளையும் மிதிவெடிகளையும் புதைத் தனர். இதனால் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவில் மீள் குடியேற்றும் பணிகள் தாமதமடை ந்தன. இராணுவம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்த பல குழுக்கள் இப்பகுதியில் மிதி வெடி அகற்றும் பணிகளில் ஈடுபடு த்தப்பட்டன.
இதன்படி முதற் தடவையாக புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மக் கள் மீள் குடியேற்றப்பட்டுள்ள தோடு அடுத்து விஸ்வமடு கிழக்கில் மக்கள் மீள் குடியேற்றப்பட உள்ள தாகவும் அரச அதிபர் கூறினார். இந்த வார இறுதிக்குள் விஸ்வமடு கிழக்கு பகுதி முற்றாக மிதிவெடிகள் அகற்றப்பட்டு மீள்குடியேற்றத்து க்காக கையளிக்கப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.
இதேவேளை முல்லைத்தீவு மாவ ட்டத்தில் சுமார் 60 வீதமான மீள்குடியேற்றப் பணிகள் நிறை வடைந்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலகம் கூறியது. துணு க்காய், மாந்தை மேற்கு பகுதிகளில் மீள்குடியேற்றும் பணிகள் முழு மையாக நிறைவடைந்துள்ளதோடு ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவில் ஒரு கிராம உத்தியோகத்தர் பிரிவில் மட்டும் மீள்குடியேற்றம் எஞ்சியுள்ளது.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது புதுக்குடியிருப்பு பிரதேசத்திலே புலிகள் பெருமளவான ஆயுதங்க ளையும் மிதிவெடிகளையும் புதைத் தனர். இதனால் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவில் மீள் குடியேற்றும் பணிகள் தாமதமடை ந்தன. இராணுவம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்த பல குழுக்கள் இப்பகுதியில் மிதி வெடி அகற்றும் பணிகளில் ஈடுபடு த்தப்பட்டன.
இதன்படி முதற் தடவையாக புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மக் கள் மீள் குடியேற்றப்பட்டுள்ள தோடு அடுத்து விஸ்வமடு கிழக்கில் மக்கள் மீள் குடியேற்றப்பட உள்ள தாகவும் அரச அதிபர் கூறினார். இந்த வார இறுதிக்குள் விஸ்வமடு கிழக்கு பகுதி முற்றாக மிதிவெடிகள் அகற்றப்பட்டு மீள்குடியேற்றத்து க்காக கையளிக்கப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.
இதேவேளை முல்லைத்தீவு மாவ ட்டத்தில் சுமார் 60 வீதமான மீள்குடியேற்றப் பணிகள் நிறை வடைந்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலகம் கூறியது. துணு க்காய், மாந்தை மேற்கு பகுதிகளில் மீள்குடியேற்றும் பணிகள் முழு மையாக நிறைவடைந்துள்ளதோடு ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவில் ஒரு கிராம உத்தியோகத்தர் பிரிவில் மட்டும் மீள்குடியேற்றம் எஞ்சியுள்ளது.
No comments:
Post a Comment