Feb 7, 2011

உள்ளுராட்சித் தேர்தல் அமைதியான முறையில் சுகந்திரமாக நடைபெற வேண்டும்: பெப்ரல்

பிரதேச சபைகளுக்கான உள்ளுராட்சித் தேர்தல்கள் சுகந்திரமாகவும் நியாயமாகவும் நடத்த அனைவரதும் ஒத்துழைப்பு அவசியம் என சுகந்திரமானதும் நீதியானதுமான தேர்தல் கண்கானிப்பு மத்திய நிலைத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் றோஹன ஹெட்டிஆராச்சி கேட்டுக்கொண்டுள்ளார்.

அரசியல் கட்சிகளுக்கு அவர் அனுப்பியுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

‘தேர்தல் அமைதியாக நடத்தும் பொறுப்பு தேர்தல் திணைக்களத்திற்கு மட்டுமல்ல பொலிஸ் திணைக்களம், அரசியற் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளுக்கும் உரியது.

தேர்தல் சட்டத்தை அனைத்துக் கட்சிகளும் பின்பற்ற வேண்டும். தேர்தல் நடவடிக்கைகள் கிராம மட்டத்தில் இடம்பெறவிருப்பதால் சூழலுக்கு பாதகமில்லாத முறையில் பிரசாரம் மேற்கொள்ளவேண்டும்’ எனவும் கேட்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment