Dec 26, 2010

அம்பாந்தோட்டையில் இன்று தேசிய சாரணர் ஜம்போரி

சுமார் 20 ஆயிரம் பேர் பங்கேற்பு:ஜனாதிபதி அதிதி: 31 வரை விசேட ஏற்பாடுதேசிய சாரணிய சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எட்டாவது தேசிய சாரணர் ஜம்போரியும், ஒன்பதாவது குருளைச் சாரணர் ஜம்போரியும் இன்று 27 ஆம் திகதி அம்பாந்தோட்டை அங்குனுகொல பெலஸ்ஸவில் நடைபெறவுள்ளன.

இதில் வெளிநாட்டு சாரணர்களோடு வடக்கு, கிழக்கு மாகாணம் உட்பட நாட்டின் சகல பாகங்களிலிருந்தும் அதிகமான சாரணர்கள் பங்குபற்றவுள்ளதோடு வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்தும் கூடுதலானோர் கலந்து கொள்ளவுள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்று ஆரம்பிக்கும் இந் நிகழ்வு எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இன்று அம்பாந்தோட்டையில் தேசிய ஜம்போரியை ஜனாதிபதி அவர்கள் ஆரம்பித்து வைப்பதாக உலக பாராளுமன்ற சாரணர் சங்கத்தின் இலங்கைக் கிளையின் தலைவர் அமைச்சர் ஜீவன் குமாரதுங்க தெரிவித்தார்.

திங்கட்கிழமை முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நடைபெறும் தேசிய ஜம்போரியில் சுமார் 20 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என அமைச்சர் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் ஜீவன் குமாரதுங்கவுடன், இலங்கை சாரணர் சங்கத்தின் பிரதம ஆணையாளர் சி. பட்டுவன்கல உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டு தகவல் வழங்கினர்.

அம்பாந்தோட்டையில் இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு ஜனாதிபதி ஆரம்பித்து வைக்கும் தேசிய ஜம்போரியில் யாழ்ப்பாணத்திலிருந்து 650 சாரணர்களும் கண்டியிலிருந்து 600 சாரணர்களும் கலந்து கொள்கின்றனர். இலங்கையில் தற்போது 49 ஆயிரம் சாரணர்கள் உள்ளனர்.

இதனை 2013 இல் ஒரு இலட்சமாக அதிகரிக்கவும் நாட்டின் சகல பாடசாலைகளிலும் சாரணர் இயக்கத்தை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக திரு. பட்டுவன்கல தெரிவித்தார்.

இலங்கையில் அமைதிச் சூழல் ஏற்பட்டுள்ளதால், 2012 இல் சாரணர் இயக்கத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி, ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் 29 ஆவது ஜம்போரியை இலங்கையில் நடத்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை முன்னெடுப்பதற்காக ஜனவரி 04 ஆம் திகதி அலுவலகமொன்றும் திறந்து வைக்கப்படுகிறது.

உலகம் முழுவதும் 32 மில்லியன் சாரணர்கள் உள்ள நிலையில், ஆசிய, பசுபிக் பிராந்தியத்தில் 25 மில்லியன் சாரணர்கள் இருப்பதாகவும் பிரதம ஆணையாளர் தெரிவித்தார். இப்பாசறை காலத்துக்குள் பங்குபற்றுபவர்களுக்கு சாரணர் செயற்பாடுகள் பல ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதுடன் அவற்றுள் ஆராய்ச்சி பரிசோதனை, பிரயாணங்கள் இளைஞர் வேலைத் திட்டங்கள், நாடகங்களுக்கும் பாசறைத்தீ,(இஅஙஆ ஊஐதஉ), “ஸ்கில் ஒரமா" (நஓஐகக ஞதஅஙஅ) நடவடிக்கைகளும் படக் காட்சிகள் என்பனவும் நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்றுள்ளன.

கலை, கலாசார நிகழ்ச்சிகள், விநோத சுற்றுப் பயணங்கள், குருளை சாரணர் கலை நிகழ்ச்சிகள், விசேடமாக திறந்த வெளியரங்கு நிகழ்வுகள் (ஞடஉச அஐத ஈஐநடகஅவ) விமானப் படை நாய்களின் சாகஸ விளையாட்டுக்கள், விமானப் படை கண்காட்சி அரங்கு (அஐத இதஊப உலஏஐஆஐபஉஐஞச நபஅகக) முதற்தடவையாக குதிரை சாகஸ விளையாட்டுக்களில் விமான சாரணர்கள் பங்கு கொண்டு சாகஸங்கள் நிகழ்த்துவர்.

மகளிர் சாரணர்களும் பங்குபெற உள்ளார்கள்.

No comments:

Post a Comment